திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்கிறாரா செல்வராகவன்!

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் இளம் படைப்பாளிகளில் கவனத்துக்குரியவராக அறியப்படுபவர் செல்வராகவன்.
மிக இளம் வயதிலேயே காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற தலைசிறந்த படங்களை இயக்கிய பெருமை செல்வராகவனுக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் தனுஷ் இன்று இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார் என்றால் அதில் செல்வராகவனின் பங்கும் இன்றியமையாதது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் இயக்கிய இரண்டாம் உலகம், என் ஜி கே உள்ளிட்ட சில படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனால் அவர் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி யின் மூன்றாவது படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.