தமிழக திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் புஷ்பா! பிரம்மாண்டமாக வெளியிடும் லைகா!

0
Follow on Google News

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வருகிறது புஷ்பா திரைப்படம். இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக நடிக்க சுகுமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் ஒரு சர்ப்ரைஸாக ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு.

இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறதாம் படக்குழு. அந்த பாடல் படத்தின் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாவதால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

புஷ்பா தமிழ் பதிப்பின் விநியோக உரிமையை 6 கோடி ரூபாய்க்கு கைப்பறியுள்ள லைகா இதுவரை தெலுங்கு படங்களுக்கு வழங்கப்படும் திரைகளின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் செய்கிறதாம். அந்த நேரத்தில் நேரடி தமிழ்ப் படங்கள் ரிலிஸும் பெரிதாக இல்லை என்பதால் அதிக திரைகளில் புஷ்பா ரிலீஸ் ஆகிறது.