வருமான வரித்துறை வலையில் ஜோதிகா… காப்பாற்ற துடிக்கும் கணவர் சூர்யா என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரிடம் தொடர்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்ததில், சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள். சினிமாவில் புலங்கப்படும் கருப்பு பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வருமான வரித்துறை சோதனையில் நடிகர் சூர்யாவை குறிவைத்து அவர் தொடர்புடைய சூர்யா உறவினரான தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானசேகரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. இதில் எஸ்.ஆர்.பிரபு, சூர்யாவின் பினாமி என்று சினிமா துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்வதற்காக தொடங்கப்பட்டது என்கிற குற்றசாட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மெண்ட் என்கிற பெயரில் இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களாக ராஜசேகர் பாண்டியன், மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனம் தொழில் ரீதியாக சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் 2டி நிறுவனமும் வருமான வரித்துறை வலையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் எந்த நேரத்தில் 2டி நிறுவனம் மற்றும் சூர்யா , ஜோதிகா, ராஜசேகர் ஆகியோர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கலாம், அல்லது அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வருமான வரித்துறையில் இருந்து மனைவியை காப்பாற்ற 2d நிறுவனத்தில் இருந்து ஜோதிகாவை வெளியேற்றும் வேலையில் சூர்யா இறங்கியுள்ளார். 2d நிறுவனம் தயாரிக்கும் படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருடைய பெயரும் இடம்பெற்று இருக்கும், ஆனால் சமீபத்தில் 2d நிறுவனம் தயாரிப்பில் வெளியான விருமன் படத்தில் சூர்யா பெயர் மட்டுமே இடம்பெற்று இருந்தது ஜோதிகா பெயர் இடம்பெறவில்லை.

மேலும், விரைவில் 2d நிறுவனத்தில் இருந்து ஜோதிகாவை வெளியேற்றும் வேலையில் சூர்யா இறங்கியுள்ளார், அதன் முன்னோட்டம் தான் விருமன் படத்தில் ஜோதிகா பெயர் இடம்பெறவில்லை என்றும், 2d நிறுவனத்திடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால், அதில் சூர்யா மட்டும் விசாரணையில் ஆஜராகும் வகையில், ஜோதிகா இதில் சிக்கிவிட கூடாது என்பதற்காக தான் ஜோதிகாவை 2d நிறுவனத்தில் இருந்து வெளியேற்றும் முடிவில் சூர்யா ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.

அன்புசெழியனிடம் ஐடி ரெய்டு….நேக்கா தப்பித்த தனுஷ் …. ரஜினிகாந்த் சிக்கியது எப்படி தெரியுமா.?