நயன்தாரா பணத்தில் நயன்தாராவுக்கே என்ன செய்தார் விக்னேஷ் சிவன் தெரியுமா.? வெட்டி பந்தா தேவையா.?

0
Follow on Google News

சென்னை : பாலிவுட்,கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என அனைத்து வுட்டுக்களிலும் கடந்தவார ஹாட் டாபிக்கே நயன்தாரா விக்னேஷ் திருமணம் மட்டும்தான். அந்த அளவிற்கு நயன்தாராவின் புகழ் இந்தியா முழுக்கவும் பரவிக்கிடக்கிறது.

ஒரு நடிகையாக தயாரிப்பாளராக ஒரு வெற்றிப்பெண்மணியாக நயன்தாரா வலம்வந்து கொண்டிருக்கிறார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனிடம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். காதல்ஜோடிகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளிநாட்டிற்கு சென்றன.

பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இந்த ஜோடி கடந்த வாரம் பிரமாண்ட முறையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் தங்கள் திருமணத்தை முன்னிட்டு ஒருவருக்கொருவர் பரிசுகளை மாறிமாறி வழங்கியுள்ளனர்.நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த வைர மோதிரம் மற்றும் தங்கநகைகள் பரிசளித்ததாக சொல்லப்படுகிறது.

அதேபோல நயன்தாரா விக்னேஷ் சிவனுக்காக கல்யாணத்திற்கு முன்னரே 20 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை பரிசளித்ததாக கூறப்படுகிறது. நயன் தாரா விக்னேஷ் சிவனுக்கு கோடிக்கணக்கில் பரிசளித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது. ஆனால் விக்னேஷ் சிவன் கோடிக்கணக்கில் பரிசளித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தமிழ்திரையுலக வட்டாரங்கள் புலம்பிவருகின்றன.

அதற்க்கு அவர்கள் சொன்ன காரணம் விக்னேஷ் சிவன் இதுவரை நான்கே படங்கள் தான் இயக்கியுள்ளார். அதிலும் முதல் படம் போடா போடி வசூல் ரீதியாகவும் ஏமாற்றியிருந்தது. அதேபோல சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படு தோல்வியடைந்தது. நானும் ரவுடிதான் மற்றும் காதுவாக்குல ரெண்டு காதல் என்ற இரு படங்கள் மட்டுமே வசூல்ரீதியாக வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் எப்படி விக்னேஷ் சிவன் பலகோடி ரூபாய் மதிப்பில் பரிசளித்திருப்பார். இது நம்பும்படியாகவா இருக்கிறது, நிச்சயம் நயன்தாரா பணத்தில் நயன்தாராவுக்கு பரிசு கொடுத்திருப்பார் விக்னேஷ் சிவன் என திரையுலகினர் கிசுகிசுத்து வருகின்றனர். அதே நேரத்தில் நயன்தாரா பரிசளித்தாந்த பங்களாவிற்கு புதுமண ஜோடிகள் தனிக்குடித்தனம் செல்ல இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலா மனைவி முத்துமலர் இரண்டாவது திருமணம்… அதிரடி ஏற்பாடு … மாப்பிள்ளை யார் தெரியுமா.?