தம்பி மனைவி ஐஸ்வர்யா உடன் செல்வராகவன் அடிக்கடி சந்திப்பு.. எதற்கு தெரியுமா.? பாவம்யா தனுஷ்..

0
Follow on Google News

கடந்த வருடம் ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் தாங்கள் ஒருமனதாக பிரிக்கிறோம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அவர்களின் 18 வருட திருமண வாழ்வை முறித்துக் கொண்டனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்காக இரண்டு குடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் இடையில் சுமூக முடிவு எட்டப்பட்டு மீண்டும் இணைந்துள்ள இந்த தம்பதியினர், சென்னை ஆரியபுரத்தில் உள்ள இவர்களுக்கு சொந்தமான வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும், விரைவில் இருவரும் இணைந்து விட்டதை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அனால் இருவருக்கும் இடையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் பிரிந்து விட்டதால் இனி இருவரும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என தகவல் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமான ஒரு பங்களா கட்டி தன்னுடைய தாய் – தந்தையுடன் கிரகப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் மனைவி ஐஸ்வர்யா மற்றும் அண்ணன் செல்வராகவன் உட்பட அவரது குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை, இது குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். இந்த படத்தின் கதையை தனுஷ் தயார் செய்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்தார். ஆனால் செல்வராகவனை சுதந்திரமாக செயல்பட விடாமல் அடிக்கடி அவருடைய வேளைகளில் குறுக்கிட்டு வந்துள்ளார் தனுஷ், இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சிறு சிறு பிரச்சனையாக உருவெடுத்து நானே வருவேன் படம் ரிலீஸ் நேரத்தில் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு பின்பு தனுஷ் – செல்வராகவன் இருவரும் பேசி கொள்வதில்லை என்றும், ஆனால் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்தாலும், செல்வராகவனுடன் தொடர்ந்து ஐஸ்வர்யா அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் குடும்ப உறுப்பினர்களில் செல்வராகவனுடன் மட்டும் நெருக்கி பழகி வந்துள்ளார் ஐஸ்வர்யா.

அந்த விதத்தில் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படம் குறித்து பல முறை செல்வராகவனை சந்தித்து அவருடைய ஆலோசனையை பெற்று வந்துள்ளார் ஐஸ்வர்யா, அப்போது நானே வருவேன் படத்தின் போது தனுஷ் தன்னிடம் நடந்து விதம் குறித்து வருத்தத்துடன் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்த செய்வராகவன், எனக்கு எதுவுமே தெரியாது போன்று அடிக்கடி பலர் மத்தியில் தனுஷ் குறுக்கிட்டு, என்னை அவமானப்படுத்துவது போன்று செயல்பட்டதை வேதனையுடன் ஐஸ்வர்யாவுடம் பகிர்த்துள்ளார் செல்வராகவன்.

மேலும் எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்பது போன்று, தனுஷ் – செல்வராகவன் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்ட பின்பு, செல்வராகவன் உடன் ஐஸ்வர்யாவின் நட்பு மேலும் அதிகரித்துள்ளது, இந்நிலையில் தனுஷ் மீது இருந்த கோபம் தான் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் செல்வராகவன் கலந்து கொள்ளவில்லை என்றும், அந்த வகையில் இந்த விஷயத்தில் செல்வராகவன் – ஐஸ்வர்யா இருவருமே பேசி வைத்து கொண்டு தான் கிரகப்பிரவேச நிகழ்ச்சியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணன் – தம்பி பிரச்ச்னையை இதற்கு மேல் வளர விட கூடாது என முடிவு செய்த தனுஷ், அவராக தற்பொழுது செல்வராகவனிடம் இறங்கி வந்து, அடுத்து தான் இயக்கி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அண்ணன் செல்வராகவனை முக்கிய கதாபாத்திரதத்தில் நடிக்க வைத்து சமரசமாகும் முயற்சியில் தனுஷ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.