போதையில் மணிரத்தினத்தை தெறிக்கவிட்ட மிஸ்கின்… என்ன தான் இருந்தாலும் இப்படிய கேட்பது…

0
Follow on Google News

தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான மிஷ்கின் 2006இல் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் அறிமுக இயக்குனரானார். அதனையடுத்து 2010 இல அவர் இயக்கிய நந்தலாலா படத்தில் நடித்து அறிமுக நடிகராக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்தவர் இவர். கதை சொல்லுவதில் சிறந்தவராக விளங்கும் மிஸ்கின், அவரது படங்களில் விதவிதமான கோணங்களில் காட்சிகளை எடுத்து அசத்தியிருப்பார்.

இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. சித்திரம் பேசுதடி, நந்தலாலா ஆகிய படங்களையடுத்து அஞ்சாதே, சைக்கோ, பிசாசு உள்ளிட்ட சில வெற்றிப்படங்களையும் இயக்கியிருக்கிறார். படத்தை இயக்குவதில் மட்டுமின்றி, தனித்துவமான நடிப்பின் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிஷ்கின் தற்போது ஏராளமான படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே, இவர் இயக்கிய பிசாசு படம் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில், நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா வைத்து பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்கி முடித்த கையோடு அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அடுத்தடுத்து படங்களை இயக்குவதும் நடிப்பதுமாக பிஸியாக இருக்கிறார்.

இப்படிப்பட்ட இயக்குனர் மிஷ்கின் சில சமயங்களில் தன் வாயால் பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார் மற்றும் பிறரையும் காயப்படுத்தி விடுவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி, அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ‘வாடா போடா’ என்றுதான் பேசுவாராம். படத்தின் நிகழ்ச்சிகளிலும் மேடையில் பேசினாலும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவன் இவன் என்று ஒருமையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட நடிகர் விஜயை அப்படி பேசித்தான் விஜய் ரசிகர்களின் வெறுப்பைப் பெற்றார். சாதரணமாக இருக்கையிலேயே, இவ்வளவு வம்புகளை வளர்க்கும் இயக்குனர் மிஷ்கின், போதையிலிருந்தால் சும்மாவா இருப்பார். இப்படித்தான் ஒருமுறை இயக்குனர் மணிரத்தினம் மிஷ்கினிடம் மாட்டிக் கொண்டாராம். எப்போதும், வேலை வேலை என்று பிஸியாக இருக்கும் பிரபலங்கள் அவ்வப்போது பார்ட்டி போன்ற நிகழ்வுகளில் ஒன்று கூடி ஜில் பண்ணுவது வழக்கம் தான்.

அந்தவகையில், இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கவுதம் மேனன், கார்த்திக் சுப்பாராஜ், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், சசி, வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் அவ்வப்போது ஒரிடத்தில் ஒன்றாக சந்தித்துக் கொள்வார்களாம். அந்த பார்ட்டியில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அப்படி ஒருமுறை இயக்குனர்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்ட மிஷ்கின், இயக்குனர் மணிரத்தினத்திடம் ‘நீங்க எப்ப நல்ல படம் எடுக்க போறீங்க?’ என்று போதையில் கேட்கவே, மணிரத்தினம் ஆடிப்போய் விட்டாராம். அவரை மட்டுமின்றி, தன்னை விட பத்து வயது மூத்தவரான இயக்குனர் பாலாஜி சக்தி வேலையும் மிஷ்கின் விட்டுவைக்கவில்லை. அவரை ‘வாடா போடா’ என்று அழைப்பாராம்.

இவர் போதையில் இப்படி களேபரம் செய்வதாலேயே, மிஷ்கின் பார்ட்டிக்கு வரார் என்றாலே பெரிய இயக்குனர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். மேலும், மிஷ்கின் இவ்வாறு செய்து கொண்டே இருந்தால், இனி பார்ட்டிக்கு இவரை அழைக்காமல் தான் இருப்பார்கள் என்பது யூகம்.