பாலா மனைவி முத்துமலரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா OPS மகன்..? OPS குடும்பத்தில் வெடித்த பூகம்பம்…

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இயக்குனர் பாலா என்பது அவரது மனைவி மற்றும் அவரது மகள் மீது எல்லை கடந்த அன்பும் காதலும் உண்டு என்பதை அவரது மனைவியே பல முறை சொல்லியிருக்கிறார்.இப்படி சந்தோசமாக சென்ற இவர்களில் வாழ்க்கையில் தடம்மாறி பயணிக்க தொடங்கியுள்ளார் பாலா மனைவி முத்துமலர்.

முக்கிய அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சுமார் நான்கு வருடம் கணவர் பாலாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், பாலா – முத்துமலர் பிரிவுக்கு காரணமாக இருந்தது அரசியல் முக்கிய தலைவரின் மகன் தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தாலும் யார் அந்த முக்கிய அரசியல் பிரமுகரின் மகன் என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே விவாகரத்து பெற்ற பாலா மனைவி முத்துமலர் உடன் முக்கிய அரசியல் பிரமுகர் மகனுக்கு நெருக்கிய தொடர்பு உள்ளது என கிசு கிசு செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியின் தோழி காயத்ரி என்பவர் ரவீந்திரநாத் மற்றும் பாலா மனைவி முத்துமலர் இருவருக்கும் இருக்கும் உறவு பற்றி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பாலாவின் மனைவி மலர், ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள் என தெரிவித்த காயத்ரி. ஆனால் எங்களுக்கே தெரியாமல் எப்படியோ ரவீந்தர்நாத்துக்கும் முத்து மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது. என காயத்ரி தேவி பேசிது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, ஏற்கனவே அரசால் புரசலாக இயக்குனர் பலா மனைவி முத்துமலர் மற்றும் OPS மகன் ரவிந்த்ரநாத் இருவருக்கும் இடையில் கிசு கிசு வெளியான நிலையில்,

முத்துமலருக்கு ரவீந்திரநாத்துக்கும் இடையே தகாத உறவு இருந்தது உண்மைதான். இதனால் தான் பாலாவிற்கும் முத்துமலருக்கும் விவாகரத்து ஏற்பட்டது என்று பகிரங்கமாக காயத்ரி தேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவீந்திரநாத் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தற்பொழுது மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஓ.பி. ரவீந்திரநாத்குமாருக்கும், ஆனந்தி என்ற திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விரைவில் இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் விவாகரத்து கோரி ரவீந்திரநாத்குமார் மனு தாக்கல் செய்துள்ளதற்கு முக்கிய காரணம் அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்று கூறப்படும் நிலையில், ஏற்கனவே இயக்குனர் பாலாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள முத்துமலர் உடன் ரவீந்திரநாத்குமார் தொடர்பில் இருந்து வருகிறார், அதனால் தான் முத்துமலர் – பாலா இருவரும் விவகாரத்து பெற்றனர், மேலும் முத்துமலர் விவகாரம் ரவீந்திரநாத்குமார் வீட்டிலும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில்,

தற்பொழுது விவாகரத்து பெறுவதற்கு மனு தாக்கல் செய்துள்ள ரவீந்திரநாத்குமர் ஏற்கனவே அவருடன் கிசு கிசுவில் சிக்கி வரும் இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி முதுமலரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆயத்தமாகிவிட்டார் அதற்காக தான் அவர் மனைவியை விட்டு பிரிய விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பித்தக்கது.