நீங்க தான் காப்பாத்தணும்.. ராஜமௌலியிடம் கெஞ்சி கூத்தாடும் மணிரத்தினம்… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மற்ற மாநிலக்களில் ரசிகர்கள் இருந்த காலம் மலையேறி, தற்பொழுது பிற மொழி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உருவாகியுள்ளது தமிழ் திரையுலகத்தினரை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது. அதே நேரத்தில் தமிழ் சினிமாக்கள் தமிழகத்தில் மண்ணை கவ்வி கொண்டிருந்த அதே வேலையில் சத்தமே இல்லாமல் தெலுங்கு நடிகர்கள், கன்னட நடிகர்கள் படம் தமிழகத்தில் வசூல் சாதனை செய்தது குறிப்பிடதக்கது.

இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், பிரபாஸ், NTR போன்றவர்களுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு சூழலில் தான், இயக்குனர் சங்கர், இனி தமிழ் சினிமாவை மட்டும் நம்பி ப்ரெஜனம் இல்லை என தெலுங்கு நடிகர் ராம் சரனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார், அதே போன்று நடிகர் விஜய் தெலுங்கு பட இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தவிர, எந்த ஒரு முக்கிய பிரபலமும் கலந்து கொள்ளவில்லை, இதில் அந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், நடிகர் விக்ரம் கூட இந்த டீசர் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிற மாநிலங்களில் எந்த ஒரு வரவேற்பும் இல்லை, பெரிய பட்ஜெட் படம் என்பதால் பிற மாநிலத்திலும் வசூலை பெற்றால் தான் படம் வெற்றி அடைய முடியும், இந்த சூழலில், சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மணிரத்தினம், அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தியாவின் நம்பர் 1 பேன் இந்தியா இயக்குனர் ராஜமௌலியை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, உங்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு, பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும், அப்படி கலந்து கொண்டால், குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் எளிதாக பொன்னியின் செல்வன் படம் ரீச் ஆகும், அது மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உங்களுக்கு ரசிகர்கள் இருப்பதால் பிற மாநில ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் ஆகும் என தெரிவித்துள்ளார் மணிரத்தினம் என கூறப்படுகிறது.

ஆனால் ராஜமௌலி எந்த ஒரு உறுதியான பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த படத்தில் தனக்கு முக்கியதுவம் இல்லை என்பதற்காக தான் நடிகர் விக்ரம் இந்த படத்தின் டீசர் விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியானது, மேலும் இனி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் விக்ரம் பங்கேற்க மாட்டார் என கூறப்படும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை ப்ரோமோஷன் செய்ய படாத பாடு பட்டு வருகிறார் மணிரத்தினம் என்பது குறிப்பிடதக்கது.

சிறைக்கு செல்லும் பயில்வான்…. மீனா குறித்து தவறான பேச்சு…. என்ன சொன்னார் தெரியுமா.?