சிம்பு மீது புகார் கொடுத்த ஞானவேல் ராஜாவா இப்படி பேசுவது…

0
Follow on Google News

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர். இந்த நிலையில் சிம்பு மீது சில வருடங்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். அந்த புகாரில் ஷூட்டிங்கிற்கு சிம்பு சரியாக வரவில்லை. இதனால் படத்தின் செலவு அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது என புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஞானவேல் ராஜா – சிம்பு இருவருக்கும் நீண்ட நாள் உரசலுக்கு பின்பு தற்பொழுது பத்து தல படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ஞானவேல் ராஜா பேசுகையில், சிலம்பரசனுக்கும் எனக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் சிலம்பரசனிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம் என்னவென்றால் அவருக்கு சமமான எதிரிகள் யாரும் இல்லை என்று நினைக்கக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்.

ஏனென்றால் நான் எல்லாம் சினிமாவில் இல்லாதப்பையே, அவர் சிறு வயதிலிருந்தே சூப்பர் ஸ்டார். காதல் அழிவதில்லை படத்தின் படப்பிடிப்பு அப்போதுதான் முடிந்திருக்கிறது, மலேசியா ட்ரிப் சென்றுள்ளோம். சூர்யா சார் கூட நான் சென்றேன். அப்போது எங்களை சின்ன பசங்கள் என்று யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. அப்ப நானும் சிம்புவும் இணைந்து மலேசியா சிங்கப்பூர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தோம்.

அப்போது அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது எந்த சிம்புவை ஒரு நண்பனாக பார்த்தோனோ, அதே சிம்பு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறார், நடுவில் அவருக்கும் எத்தனையோ சவால்கள் வந்தது. எத்தனையோ பிரச்சனைகளை அவர் எதிர்கொண்டார், இந்த படம் தொடங்கிய புதிதில் கூட எனக்கு மிகப்பெரிய ஒரு வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். எனக்கு அப்போது தோன்றிய ஒரே விஷயம் என்றால்,

இப்படி ஒரு மனிதனுக்கு நம்முடைய படங்களில் உறுதியாக ஒரு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் , அந்த வகையில் 10 தல படம் உறுதியாக மிகப்பெரிய வெற்றியை அடையும். என்ன சோதனை வந்தாலும் சரி, எந்த பிரச்சனை வந்தாலும் சரி, இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமா மாற்ற வேண்டும் என்று என்னுடைய எண்ணமாக இருந்தது, ஏனென்றால் அவருடைய மனது அப்படி.

எந்த நேரத்திலும் எந்த ஒரு நடிகரை பார்த்தும் பொறாமை பட்டவர் கிடையாது, ஒரு புதுமுக நடிகர் படம் வந்தால் கூட அவரை அவர்களை அந்த நடிகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகின்றவர் சிம்பு அவருக்கு பத்துதலை படத்திற்கு பின்பு வேறு ஒரு இடம் காத்துக் கொண்டிருக்கிறது அதை நோக்கி அவருடைய சென்று கொண்டிருக்கிறது என ஞானவேல் ராஜா தெரிவித்தார்.