பாலா – முத்துமலர் நேரில் சந்திப்பு… கண்ணீர் விட்டு கதறி அழுத முத்துமலர்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தாலும், கடந்த நான்கு வருடங்களாக பாலா-முத்துமலர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மனைவி மற்றும் மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட பாலா அவர் மனைவியை விட்டு பிரிந்தது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

பாலா – முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு தான், இவர்கள் பிரிவதற்கான காரணம் தெரியவந்தது. அதில் அரசியல் கட்சியின் முக்கிய தலைவரின் மகன் ஒருவருடன் நெருங்கி பழகி வந்த முத்துமலர் அடிக்கடி அவருடன் வெளிநாடு, டெல்லி என சொகுசு ஓட்டலில் தங்கி லூட்டியடித்த விஷயம் கணவர் பாலாவுக்கு தெரியவந்துள்ளது. இதன் பின்பு தான் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் பாலா – முத்துமலர் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

பாலா-முத்துமலர் விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு இவர்களின் மகள், அம்மா முத்துமலரிடம் இருந்து வருகிறார். மனைவியை விட்டு பிரிந்தாலும் மகள் மீது அளவற்ற பாசத்துடன் தற்பொழுது வரை இருந்து வருகிறார் பாலா, மகளும் தந்தை பாலா மீது பாசத்துடன் உள்ளார். இந்நிலையில் மகளை பார்க்க விரும்பும் போதெல்லாம் மகளை எங்காவது அழைத்து சந்தித்து வருகிறார் பாலா என்றும், இது கடந்த நான்கு வருடங்களாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மகளை சந்திக்க விரும்பிய பாலா தகவல் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து உறவினர் வீட்டில் வைத்து பாலா அவருடைய மகளும் சந்திக்க ஏற்பாடு நடைபெற்று. முத்துமலர் மகளை உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். முத்துமலர் சென்ற சில மணி நேரம் கழித்து அங்கே சென்ற பாலா அங்கிருந்த ஒரு சிலரிடம் மட்டும் பேசிவிட்டு உடனே மகளை தனியாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரம் வரை மகளிடம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் பாலா என்றும், இதில் முத்துமலர் – பாலா இருவரும் பார்த்து கொண்டால் கூட ஏதும் பேசவில்லை என்றும், பாலா அவரது மனைவி முகத்தை கூட பார்க்க விரும்பாமல் மனைவி இருக்கும் பக்கம் பார்க்க கூட இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பாலா தனது மகளை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு முத்துமலர் உறவினர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது எங்கள் திருமண வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது, எங்களை நன்றாக தான் அவர் பார்த்து வந்தார், யார் கண் பட்டது தெரியவில்லை என் வாழ்க்கையில் எப்படி நடந்து விட்டது, பாவம் எனது மகள் தான் ரெம்ப சிரம படுகிறாள் என கண்ணீர் விட்டு உறவினர்களிடம் கதறி அழுதுள்ளார் முத்துமலர் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யிடம் இருந்து எச்சரிக்கை அறிக்கை…! பொருமை இழந்த விஜய் ..என்ன காரணம் தெரியுமா.?