கொடூர குணத்தை மனைவியிடம் வெளிப்படுத்திய பாலா.. விவாகரத்து பின்னணியில் திடுக்கிடும் தகவல் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

மதுரையை பூர்விகமாக கொண்ட இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவி முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு பிரார்தனா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இயக்குநர் பாலாவும் அவரது மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த அவர்கள், கடந்த சனிக்கிழமை (5.3.2022) சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாலு மஹேந்திராவிடன் உதவி இயக்குனராக இருந்த பாலா சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அதனை தொடர்ந்து நந்தா, பிதாமகன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்த பாலா நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் சினிமாவில் முன்னணி நடிகராக வருவதர்க்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இயக்குனர் பாலா இல்லை என்றால் விக்ரம், சூர்யா இருவரும் சினிமாவில் காணாமல் போயிருப்பார்கள் என்றே சொல்லலாம்.

இதன் பின்பு நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற வெற்றி படங்களை கொடுத்த பாலா அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது, பாலா படங்கள் மிக முரட்டு தானமாக இருக்கும், பாலாவின் படைப்புகள் பல விருதுகளை அள்ளி குவித்தாலும் அவருடைய படைப்புகளை பார்ப்பதற்கு மனவலிமை மிகவும் முக்கியம் அந்த அளவுக்கு அவருடைய படைப்புகள் பார்ப்பவர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஒரு கொடூரமாக இயக்குனர் என்று கூட பாலா மீது விமர்சனம் எழுந்து வந்த நிலையில், கடைசியாக அவர் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான பரதேசி படத்திற்கு பின்பு அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் படுதோல்வியை தழுவியது, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா என பாலா இயக்கத்தில் வெளியான படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் திரையில் மட்டும் தனது கொடூர குணத்தை படைப்புகள் மூலம் காண்பித்த பாலா.

கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்திலும் கொடூர குணத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது, ஒரு காலத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்த இயக்குனர் பாலா தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்ததால், மிக பெரிய சரிவை சந்தித்து பாலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. இதன் கோபத்தின் வெளிப்பாட்டை தனது மாணவியிடம் காண்பிக்க தொடங்கியுள்ளார் பாலா என கூறப்படும் நிலையில்.

தனது கொடூரமான கோபத்தின் காரணமாக கடந்த சில வருடங்களாக பாலா மற்றும் அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்த நிலையில், தற்போது சட்டப்பூர்வமாக இருவரும் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவை பார்த்து திருந்துவார்களா சூர்யா குடும்பத்தினர்..! சத்தமில்லாமல் என்ன செய்து வருகிறார் குஷ்பு தெரியுமா.?