மீண்டும் சூர்யா வீட்டு கதவை தட்டிய பாலா… கதவு திறக்கப்படவில்லை… பாலா எடுத்த முடிவு என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, மேலும் அவருடைய குடும்பத்திலும் பிரச்சினையின் காரணமாக அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார். இப்படி சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் தோல்வியை தழுவி மிகப்பெரிய விருக்தி இருந்த பாலாவுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் முன் வந்தார் சூர்யா.

பாலா இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து வணங்கான் படத்தில் நடிக்க முன் வந்தார் சூர்யா, இந்த நிலையில் வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோதல் உச்சகட்டத்தை அடைந்தது, இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா கோபித்துக் கொண்டு வெளியேற படப்பிடிப்பு பாதியில் நின்றது.

இதன் பின்பு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தலைக்கு வந்து தலப்பாயுடன் போகட்டும் என்று இதுவரை ஏற்பட்ட நஷ்டம் போதும், மேலும் இந்த படப்பிடிப்பு தொடங்கி மேலும் பல கோடியை இழக்க விரும்பவில்லை என வணங்கான் படத்தை கைவிட முடிவு செய்து சூர்யா.

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வணங்கான் படம் டிராப் ஆகி உள்ளது. ஆனால் பாலா அதர்வா நடிப்பில் வணங்கான் படத்தை எடுப்பதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் பாலா செய்து வருகிறார். இந்த நிலையில் அதர்வா நடிக்கும் வணங்கான் படத்தை தயாரிக்க சூர்யாவுக்கு சொந்தமான 2d நிறுவனம் தயாரிப்பதற்காக சூர்யா வீட்டு கதவை தட்டியுள்ளார் இயக்குனர் பாலா.

ஆனால் மீண்டும் பாலா படத்தை தயாரிப்பதற்கு சூர்யா முன்வரவில்லை என்பதால் தன்னுடைய சொந்த தயாரிப்பில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வணங்கான் படத்தை தயாரித்து இயக்குகிறார் பாலா. மற்ற தயாரிப்பாளர்கள் என்றால் வீண் செலவு செய்வதும் தன்னுடைய சொந்த தயாரிப்பு என்றால் மிகக் குறைந்த அளவில் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிப்பது பாலா மட்டுமல்ல இயக்குனர் சங்கரும் ஒரு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.