நட்சத்திர ஓட்டலில் பாலா செய்த செயல்… பிச்சை காரர் என்று கூட பார்க்காமல்…

0
Follow on Google News

இயக்குனர் பாலா, தமிழ் சினிமாவில் மிக சிறந்த படைப்பாளி. தன்னுடைய வித்தியாசமான படைப்புகள் மூலம் திரைப்படத்தை பார்ப்பவர்களை பாதிக்க அடைய செய்யும் வகையில் சிறந்த படைப்பாளி. விருதுகளை அள்ளி குவிக்கும் தலை சிறந்த இயக்குனர். இப்படி இயக்குனராக அவர் படைப்புகள் மூலம் பெயர் புகழை பெற்று இருந்தாலும், யாரும் அறியாத பாலாவின் மறுபக்கத்தை கேள்வி பட்டவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இருக்கும்.

பாலா மிக கொடூரமாக படைப்பாளி, ஒரு சைக்கோ இயக்குனர் என்று கூட சொல்வார்கள் அந்த வகையில் பாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் காசியில் உள்ள அகோரிகளிடம் அமர்ந்து கஞ்சா புகைத்த அனுபவம் கூட பாலாவுக்கு உண்டு என்றும். இப்படி தான் ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு பிச்சைக்கார நண்பர் ஒருவர் உண்டு என்று கூறப்படுகிறது.

அவ்வப்போது ராமேஸ்வரம் செல்லும் பாலா அந்த பிச்சைக்கார நண்பரிடம் நீண்ட நேரம் அவருடன் அமர்ந்து பேசுவாராம். ஒரு முறை தனது உதவி இயக்குனர்களிடம் ராமேஸ்வரம் சென்ற பாலா. உதவி இயக்குனரிடம் அந்த பிச்சைக்கார நண்பரை அழைத்து சென்று முடி வெட்டி, ஷேவிங் செய்து அழைத்து வர செய்து தான் தங்கி இருந்த ஹோட்டலில் குளிக்க வைத்து அவருக்கு, புதியதாக பட்டு வெட்டி பட்டு சட்டை அணிய வைத்து ஹோட்டலில் இருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது கோவில் வெளியில் அமர்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்த பிச்சை காரர்கள் ஆச்சரியத்துடன் தங்களுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்த நபர் பட்டு வேட்டி பட்டு சட்டையெல்லாம் போட்டுகொண்டு வருவதை பார்த்துள்ளனர். நேராக கோவில் உள்ளே சென்ற பாலாவுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. அப்போது கோவிலில் பாலாவுக்கு பரிவட்டம் கட்ட கோவில் பூசாரி வந்த போது தடுத்து நிறுத்திய பாலா.

அருகில் இருந்த பிச்சைக்கார நண்பருக்கு பரிவட்டம் கட்ட சொல்லியிருக்கார். கோவில் பூசாரி என்னடா இது பிச்சைக்காரனுக்கு பரி வட்டம் கட்ட சொல்கிறார் என திகைத்து போக. மீண்டும் பாலா இவருக்கு பரிவட்டம் காட்டுங்க என கூற. அந்த பிச்சைக்காரருக்கு பரிவட்டம் கட்டியுள்ளனர் அந்த கோவில் பூசாரி. மேலும் கோவிலில் இருந்து அந்த பிச்சைக்கார நண்பரை தான் தங்கியிருத்த நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்ற பாலா. அங்கே பிச்சைக்கார நண்பருடன் மகிழ்ச்சியுடன் பேசியதாக கூறப்படுகிறது.

இப்படி வித்யாசமாக எதையாவது செய்து வரும் பாலா பற்றி மற்றொரு விஷயமும் வெளியாகியுள்ளது. அதில் சினிமாவில் பொதுவாக இயக்குனர்கள் என்பவர்கள் கண்டிப்புடனே இருப்பார்கள். அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்களை பார்த்து அங்கே பணிபுரிகின்ற பலரும் ஒரு அச்சத்துடனே இயக்குனர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வார்கள்.

ஆனால் நடிகர்கள் ஆரம்ப கட்டத்தில் இயக்குனரை பார்த்து பயந்தாலும் கூட அவர்கள் வளர்ந்த பின்பு இயக்குனருக்கு சமமாக தங்களை பழகிக் கொள்வார்கள். ஆனால் இயக்குனர் பாலா சற்று வித்தியாசமானவர். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் தனக்கு கீழ்படிந்து தான் இருக்க வேண்டும் என்கின்ற பார்வையிலேயே இருந்து வரக்கூடியவர் என்கின்ற விமர்சனம் சினிமா வட்டாரத்தில் உள்ளது.

அந்த வகையில் நடிகர் சூர்யாவை எப்படி நந்தா படத்தில் கையாண்டாரோ.? இப்போது அப்படித்தான் கையாண்டு வந்துள்ளார். அதனாலேயே சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு வணங்கான் படம் பாதியிலே கைவிடப்பட்டது எனக் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு பதில் நடிகர் அருண்விஜய்
நடிப்பில் வணங்கான் படத்தை பாலா இயக்கி வருகிறார்.

பாலா என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய்துவிட்டு பாலா அருகில் கூட அமராமல் ஒரு ஓரமாக நின்று விடுகிறாராம் அருண் விஜய். அதே போன்று இந்த படத்தில் நடித்து வரும் சமுத்திரகனி, பாலா அருகில் காலியான நாற்காலி இருந்தாலும் கூட அந்த நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்து கொண்டு பாலாவிடம் பேசி வருவதை படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் பெரும் ஆச்சரியத்து பார்த்து வருவதாக கூறப்படுகிறது.