அஜித் சாரை ஒரே ஒரு முறை சந்திக்கணும்… ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது, மேலும் இந்த படத்தில் இருந்து தான் நடிகர் அஜித்குமார் தல என்று அடைமொழியுடன் சினிமா ரசிகர்கள் அழைக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் ரமணா, சூர்யா நடிப்பில் கஜினி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குனர் முருகதாஸ், இந்தி சினிமாவிலும் கால் பதித்தார்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்தடுத்து நடிகர் சூர்யாவுடன் தொடர்ந்து இரண்டு படம், அடுத்து நடிகர் விஜய் உடன் தொடர்ந்து மூன்று படம் என மற்ற முன்னணி நடிகர்களுடன் கமிட் ஆகி வந்த ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த நடிகர் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட பண்ணுவதற்கான வாய்ப்பு அமையவில்லை.

மேலும் ஏ ஆர் முருகதாஸ் பலமுறை அஜித்தை சந்தித்து கதை சொல்லி மீண்டும் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று முயற்சித்த போது அதற்கான வாய்ப்பை நடிகர் அஜித் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. எதற்காக ஏர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் அஜித் படம் நடிக்கவில்லை என்றும், அஜித்துக்கு ஏன் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கோபம் என சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது பல தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்திடம் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு பின்பு அதை மாற்றி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உதாரணம் என்பது வெளியாகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் கஜினி. இந்த படம் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை ஹிந்தியில் படம் இயக்கும் அளவுக்கு வாய்ப்பை பெற்று தந்தது.

இந்த நிலையில் கஜினி படத்தின் கதையை முதலில் நடிகர் அஜித்திடம் தான் தெரிவித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். கதையைக் கேட்ட நடிகர் அஜித் நிச்சயம் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என உறுதி அளித்துள்ளார். சற்று காத்திருங்கள் உங்களுக்கு நான் கால் சீட் தருகிறேன் என கால அவகாசம் கேட்டுள்ளார் நடிகர் அஜித்.

ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் அஜித்துக்கு தெரியாமல் சூர்யாவை சந்தித்து கஜினி படத்தின் கதையை தெரிவித்து சூர்யாவிடம் கமிட்டாகியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி படத்தின் கதை தன்னிடம் தெரிவித்துவிட்டு, இந்த படத்தில் நடிக்கிறேன் என உறுதியளித்த பின்பும் கூட, என்னிடம் இது பற்றி எதுவும் கேட்காமல், சூர்யாவிடம் கதையை தெரிவித்து கஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்து அஜித்துக்கும் மிக பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கஜினி படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸ் முயற்சித்த போது அதற்கான வாய்ப்பை அஜித் கொடுக்கவில்லை, அஜித் சாரை ஒரே ஒரு முறை சந்தித்து கதை சொன்னால் போதும், எப்படியும் அவரை கன்வின்ஸ் செய்து, பழைய கோபத்தை மறக்க வைத்து நம்ம படத்தில் நடிக்க வைத்து விடலாம் என அஜித்தை சந்தித்து கதை சொல்வதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் பல முறை முயற்சித்துள்ளார்.

அணல், இந்த பக்கமே வரவே வேண்டாம் , உன்னுடைய சங்கத்தமே வேண்டாம் என ஏ.ஆர்.முருகதாஸை நேரில் சந்திக்க கூட அஜித் வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித்திடம் ஒன்றை சொல்லிவிட்டு அதற்க்கு மாறாக செய்தால் அவர்களை தன் பக்கத்தில் கூட விட மாட்டார் என்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் விவகாரம் உதாரணம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.