விஜய் பட கதையை திருடி ஷாருகானை வைத்து படம் எடுத்து வசமாக சிக்கிய அட்லீ..! திருடியது எந்த படம் தெரியுமா.?

0
Follow on Google News

பழைய படத்தின் கதைகளை காப்பியடித்து படம் எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ முதல் படமான ராஜா ராணி படம், பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தின் கதை என்கிற விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான, தெறி, மெர்சல், பிகில் போன்ற அனைத்தும் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வெளியான படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்கிற விமர்சனம் உண்டு.

முதல் இரண்டு படங்களில் பழைய படத்தின் கதையை மட்டும் காப்பியடித்து வந்த அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான மெர்சல் மற்றும் பிகில் படத்தில் பல காட்சிகள் ஹாலிவூட் படத்தில் இருந்து காப்பியடித்த சம்பவமும் அரங்கேறியது. அடுத்த படத்தின் கதை மற்றும் காட்சிகளை காப்பியடித்து மாட்டி கொண்டாலும், சிறிதும் வெட்கப்படாமல் தன்னுடைய படத்தின் கதைக்காகவும், அதில் இடம்பெற்ற கட்சிகளுக்காகவும், பல நாட்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டது போன்று மேடைகளில் பேசுவார் அட்லீ.

தற்பொழுது நடிகர் ஷாருகான் நடிப்பில் இந்தியில் லைன் என்கிற புதியப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் அட்லீ, இந்த படத்தில் ஷாருகானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. லைன் படம் தொடங்கிய சில நாட்களில் ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கினார், இதனால் லைன் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது, மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைபெற்றது.

தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இதுவரை எடுத்த லைன் படத்தின் காட்சிகளை பார்த்த ஷாருகான், அதில் சில காட்சிகள் இதுக்கு முன்னால் பார்த்தது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்பு இது சில ஹாலிவூட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டு புதியதாக படப்பிடிப்பு நடத்த அட்லீயிடம் ஷாருக்கான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஷாருகான் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பதாக இந்தி சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் மகன் வெளிநாட்டில் தங்கி படித்து அங்கேயே தொழில் செய்து வருவதாகவும். தந்தை மும்பையில் தாதாவாக இருந்து வருகிறார். நயன்தாரா புலனாய்வு செய்யும் காவல்த்துறை அதிகாரியாக வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் சத்யராஜ் மும்பையில் தாதாவாக இருக்கிறார், அவருடைய மகன் விஜய் லண்டனில் தொழில் செய்கிறார், நடிகை அமலாபால் காவல்த்துறையாக வருகிறார். இதே கதை போன்று தான் ஷாருக்கான் நடிக்கும் லைன் படத்தின் கதையும் உள்ளதாக கூறப்படுகிறது, லைன் படம் வெளியான பின்பு தான், எத்தனை படங்களில் இருந்து கதைகளையும், காட்சிகளையும் காப்பியடித்து அட்லீ படம் எடுத்துள்ளார் என்பது தெரியவரும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

கமல்ஹாசனை நேரில் அழைத்து அசிங்கப்படுத்திய ராஜமௌலி..! செம்ம டென்ஷனில் கமல் என்ன செய்தார் தெரியுமா.?