காட்சிகளை திருடி ஷாரூக்கானிடன் வசமாக சிக்கிய அட்லீ..! ஷாருகான் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் அட்லீ தற்பொழுது இந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு லைன் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படம் தொடங்கியது முதல் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு வருகிறது. மேலும் இந்த படம் தொடங்கியது தொடர்ந்து முன்பையில் தனது மனைவியுடன் தங்கி வருகிறார் அட்லீ.

லைன் படம் தொடங்கிய சில நாட்களில், ஷாருக்கான் மகன் போதை பொருள் தொடர்பான வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடைய மகனை சிறையில் இருந்து வெளியில் எடுக்கும் வேலைகளில் தீவிரமாக ஷாருக்கான் ஈடுபட்டு வந்ததால், சில காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இடையில் கொரோனா தொற்றின் காரணமாக லயன் படம் தடைபட்டது. இதனால் படம் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது.

ஒவ்வொரு முறையும் லைன் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்ட போது. இயக்குனர் அட்லீ சென்னை திரும்பாமல், மும்பையில் தனது மனைவியுடன் விலை உயர்ந்த நட்சத்திர ஓட்டலில் லைன் படத்தின் தயாரிப்பாளர் செலவில் தங்கி வந்துள்ளார். இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு வீன் செலவு என்றும், இதனால் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் அட்லீ மீது செம்ம கடுப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் தமிழில் வெளியான படங்களில் பல காட்சிகள் எதாவது ஒரு படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட கட்சியாக இருக்கும். அட்லீ படம் என்றாலே காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் தான் என்கிற ஒரு பார்வை தமிழ் சினிமாவில் உண்டு. அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் மற்றும் மெர்சல் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கபட்டு எடுக்கப்பட்டது என்பது ஆதாரத்துடன் வெளியானது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தற்பொழுது ஷாருக்கான் நடிக்கும் லைன் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், படத்தின் பல காட்சிகள் எங்கயோ பார்த்த மாதிரி ஷாருகானுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதன் பின்பு தான் சந்தேகப்படும் அந்த காட்சிகள் பல ஹாலிவூட் படங்களில் காப்பியடிக்கப்பட்டது என்பதை கண்டு பிடித்த ஷாருகான். இதெல்லாம் நம்மிடம் வேண்டாம் தம்பி என்று அட்லீ யை அழைத்து கடுமையாக கண்டித்த ஷாருக்கான்.

மேலும் இந்த படம் வெளியானால். மற்ற படங்களில் இருந்து நீ காப்பியடித்த காட்சிகள் என்று கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாகும், மேலும் ஷாருக்கான் காப்பியடித்துள்ளார் என்று தான் விமர்சனம் வரும் என்றும். காப்பியடித்த காட்சிகளை நீக்கிவிட்டு புதியதாக படப்பிடிப்பு நடத்த ஷாருக்கான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஷாருக்கான் விருப்பப்படி காட்சிகள் மாற்றம் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மற்ற படங்களில் இருந்து காட்சிகளை திருடி கையும் களவுமாக ஷாருக்கானிடம் மாட்டிய அட்லீ பற்றிய பேச்சு தான் தற்பொழுது இந்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஷாருக்கானுக்கு தெரியமால் எத்தனை காட்சிகள் மற்ற படத்தில் இருந்து அட்லீ காப்பியடித்துள்ளார் என்பது படம் வெளியான பின்பு தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு கிட்னி தானம் செய்தவர்க்கே இந்த நிலைமையா.? நன்றி உணர்வு இல்லாத ரஜினி குடும்பம்.. என்ன தெரியுமா.?