அட்லீ தான் காப்பாற்ற வேண்டும்… நயந்தாராவுக்கு ஏற்பட்ட மிக பெரிய சிக்கல்…

0
Follow on Google News

நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்ற நயன்தாரா , பின்பு அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருமணத்தை கைவிட்டு விட்டு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அட்லீ இயக்கத்தில் ராஜாராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய வரவேற்பை பெற்று தந்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நயன்தாரா.

சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருந்த நயன்தாரா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட் ஆகிய படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்தது, மேலும் இரண்டு படங்களும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதால் இந்தப்படத்தின் முழு தோல்விக்கும் நயன்தாரா தான் காரணம் என முத்திரை குத்தப்பட்டார் நயன்தாரா.

திருமணத்திற்கு பின்பு தொடர் தோல்வி காரணமாக சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து வந்தார் நயன்தாரா, இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை இரண்டு படங்களில் நயன்தாரா நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து அந்த இரண்டு படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு ஒரு படத்திற்கு தலா 5 கோடி சம்பளம் விகிதம் மொத்தம் 10 கோடி சம்பளம் பேசப்பட்டு, அதற்கான அட்வான்ஸ் தொகையும் கொடுத்து நயன்தாராவை ஒப்பந்தம் செய்து, இரண்டு படத்தில் நடிக்க தொடர்ந்து கால் சீட் கேட்டு வந்துள்ளார்கள்.

ஆனால் கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார் நயன்தாரா, இந்நிலையில் மார்க்கெட் இல்லாமல் உள்ள நயன்தாரா கால் சீட் கொடுத்து நடித்தாலும், அந்த படம் தோல்வியை கொடுத்து தமக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை, நேரடியாக நயந்தாராவை சந்தித்து இனி உங்கள் கால் சீட் எனக்கு தேவையில்லை, நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுங்க என கேட்டுள்ளார்.

இதே போன்று தயாரிப்பாளர் SR பிரபு இதற்கு முன்பு நயன்தாரா அவருடைய தயாரிப்பில் நடிக்க ஒரு படம் ஒப்பந்தம் செய்திருந்தார். அவரும் நயன்தாராவை சந்தித்து உங்கள் கால் சீட் தேவையில்லை என கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கியுள்ளார். இந்நிலையில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி விட்டு சென்று வருவது நயன்தாராவுக்கு மேலும் சினிமாவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா கைவசம் தற்போது பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் இல்லை, அதே நேரத்தில் நடிகர் சாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இந்நிலையில் ஜவான் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே சினிமாவிலிருந்து விலகி பிரபுதேவாவை திருமணம் செய்ய போன நயன்தாரா, பிரபுதேவாவின் உறவை முடித்துக் கொண்டு சினிமாவில் வெற்றி எகொடுக்க மிகப்பெரிய உதவியாக இருந்தது அட்லீ இயக்கத்தில் நடித்த ராஜா ராணி திரைப்படம் .

அதே பார்முலா தற்போது கைகொடுக்கும் என்றும், மேலும் சென்டிமெண்டாக ரீ என்ட்ரிக்கு அட்லி ராசியான இயக்குனராக இருப்பார் என அட்லியை மல போல் நம்பி இருக்கும் நயன்தாரா. தன்னுடைய நடிப்பில் வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சினிமாவில் இழந்த மார்க்கெட்டை மீட்டெடுத்து மூன்றாவது இன்னிங்க்சில் ஒரு ரவுண்டு வரும் திட்டத்தில் இருந்து வருகிறார் நயன்தாரா என கூறப்படுகிறது.