அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட… விக்னேஷ் சிவனுக்கு நயன்தார சொன்ன அட்வைஸ்…

0
Follow on Google News

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், அவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிதாக சொல்லும்படி இல்லை. நானும் ரௌடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அந்த படத்தில் நடித்த நடிகை நயன்தாராவை காதலித்த பின் அவருடைய தயவில் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற விக்னேஷ் சிவன், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை, இதனால் தான சேர்ந்த கூட்டம் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. விக்னேஷ் சிவனை வைத்து படம் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வராத நிலையில், காதலன் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதத்தில், காத்து வாக்கில் இரண்டு காதல் என்கின்ற படத்தை நயன்தாரா தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்து விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பை அமைத்து கொடுத்தார்.

இதனை தொடர்ந்து நயன்தாரா விசுவாசம் படத்தில் நடிகர் அஜித் உடன் நடித்த போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அஜித் நடிக்கும் படத்தின் வாய்ப்பை தன்னுடைய கணவர் சிவனுக்கு பெற்று தந்தார். அஜித் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டுவிட்டு முழு கதையும் விக்னேஷ் சிவனை தயார் செய்து வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.ஆனால் மிகப்பெரிய ஒரு நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ஒரு சீரியஸ்னஸ் இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவன்.

ஏன்னா தானோ என்று ஒரு கதையை தயார் செய்து அஜித்திடம் விக்னேஷ் சிவன் தெரிவிக்க, இது என்ன மொக்க கதையாக இருக்கிறது, இதில் நான் நடித்தால், மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் எனது ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்து விடுவார்கள், என கதை பிடிக்கவில்லை என விக்னேஷ் சிவனை தன்னுடைய படத்தில் இருந்து வெளியேற்றினார் அஜித்.

இந்நிலையில் எத்தனையோ இயக்குனர்கள் அஜித்திடம் கதை சொல்ல தவமாய் காத்திருக்கும் காலத்தில், நயன்தாரா சிபாரிசில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கோட்டை விட்டார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் அஜித் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விக்னேஷ் சிவன் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கினார்.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதாக இருந்தது, ஆனால் தற்போது கேரளாவில் நயன்தாரா மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட முடிவு செய்து அதற்கான இடங்களை வாங்கி வேலைகளை தொடக்க இருக்கிறார். இந்நிலையில் கணவர் விக்னேஷ் சிவனிடம் அடுக்குமாடி கட்டும் வேலைகளை பொறுப்பாக கவனித்து கொள், உனக்கு சினிமா செட்டாகாது என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் முதலீடு செய்துள்ள தொழில்களை விக்னேஷ் சிவன் கவனித்து கொள்ளட்டும், ஷாரூஹான் ஜோடியாக நயந்தாரா நடித்துள்ள ஜவான் படம் வெளியான பின்பு நான் ஒரு ரவுண்டு சினிமாவில் வருவேன், அதனால் நான் சினிமாவி நடிக்கிறேன், நீ நம் மற்ற தொழில்களை பொறுப்பாக இருந்து பார்த்து கொள் என நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

ஆனால் விக்னேஷ் சிவன் பிடிவாதமாக நான் படம் இயக்கிய தீருவேன் என உறுதியாக இருக்க, எப்படியோ போ, ஆனால் நான் உன் படத்தில் நடிக்க மாட்டேன் என விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிப்பதாக இருந்த நயன்தாரா தற்பொழுது அந்த படத்தில் இருந்து விளக்கியுள்ளதாகவும், நயன்தாராவுக்கு பதில் நடிகை ஸ்ரீதேவி மகளை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.