நடிகை அறையில் கொத்து கொத்தாக ஆணுறைகள்..! அறைக்கு வந்த அரசியல்வாதி யார்..?

0
Follow on Google News

சென்னை : தனியார் டிவி சேனலில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை சித்ரா. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரிடம் நெருங்கி பழகிய ஆண் நண்பர்கள் நாளடைவில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அவரது நெருங்கிய தோழியான ரேகா நாயர் காவல்துறையினரிடமும் தனக்கு நெருக்கமானவர்களிடமும் கூறிய சில விஷயங்கள் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. சின்னத்திரை நடிகை வி.ஜெ. சித்ரா டிசம்பர் 9ஆம் தேதி 2020ல் நசரத்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைதுசெய்யப்பட்டார். பின்னர் இரண்டுமாதம் கழித்து ஜாமீனில் வெளிவந்தார். இந்த நடிகை தற்கொலை வழக்கில் அதிமுக அமைச்சரின் மகன் மற்றும் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னர் அமைச்சர் ஒருவரின் மகன் மற்றும் இன்னொரு அதிமுக அமைச்சர் என மூன்று பேர் பெயர்கள் பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கப்பட்டது.

சித்ராவின் கணவரான ஹேம்நாத் கைதுசெய்யப்பட்டதோடு இந்த வழக்கு முடிவடைந்ததாக கூறி போலீசார் விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனிடையே ரேகா நாயர் சித்ரா கொலைக்கு கணவர் ஹேம்நாத்துடன் சேர்ந்து நான்குபேருக்கு தொடர்பிருப்பதாக கூறி நெருப்பை பற்றவைத்தார். ஆனால் அவர் கூறியதற்கு சாட்சி இல்லை.

ரேகா கூறியது போலவே ஹேம்நாத்தும் சித்ரா தற்கொலை செய்துகொண்ட அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சித்ராவுக்கு பாலியல் தொந்தரவு இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். சித்ராவும் ஹேம்நாத்தும் திடீரென அவசரம் அவசரமாக பதிவு திருமணம் செய்துள்ளனர் மேலும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்துள்ளனர். சித்ரா வீட்டினர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் சித்ராவின் அறையில் கொத்து கொத்தாக அதிக அளவில் ஆணுறைகள் இருந்ததை பார்த்ததாக இம்மானுவேல் மற்றும் ரேகா கூறியுள்ளனர். ரேகா நாயர் ” கணவன் மனைவியாக வாழும் அவர்களுக்கு அவ்வளவு ஆணுறைகள் எதற்கு’ என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அமைச்சர் ஒருவர் சின்னத்திரை விருது வழங்குவது தொடர்பாக,

சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலான லீலா பேலசுக்கு சித்ராவை அழைத்திருக்கிறார். அங்குதான் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அறிமுகம் சித்ரா தங்கியிருந்த நசரத்பேட்டை வரை வந்திருக்கிறது என தனியார் பிரபல சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. சித்ராவை அந்த அமைச்சர் வற்புறுத்தியிருக்கலாம் அல்லது சித்ரா அவருடனான உறவை துண்டிக்க முயன்ற போது தொந்தரவுகளை சந்தித்திருக்கலாம் என தற்போது யூகங்கள் வெளிவந்துள்ளது.

சூரியை நம்ப வைத்து கழுத்தை அறுந்த  வெற்றிமாறன்.. சூரியின் பரிதாப நிலைமை என்ன தெரியுமா.?