உங்களுக்கு வைரமும் முத்தும் பிறந்து இருக்கிறது… சின்மயியை சீண்டிய வலைதளவாசி .. சின்மயி சொன்ன பதில் என்ன.?

0
Follow on Google News

பின்னணி பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தார். சின்மயி கர்ப்பமாக இருக்கிறார் என்கின்ற எந்த ஒரு செய்தியும் வெளிவராத சூழலில் திடீரென தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்ற சமூக வலைத்தளத்தில் சின்மயி பதிவு செய்தது, வாடகைக்கு தாய் மூலம் தான் குழந்தை பெற்றுள்ளார் என்கின்ற ஒரு தகவல் பரவலாக வெளியானது.

இந்த நிலையில் சின்மயிக்கு பிறந்த இரட்டைக் குழந்தை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி, மேலும் எனது தனிப்பட்ட வாழ்க்கை குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டம் ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருந்ததாக தெரிவித்த சின்மயி. இந்த ஒரு புகைப்படத்தை தவிர வேறு எந்த ஒரு புகைப்படமும் எடுக்கவில்லை என்றும் சின்மயி தெரிவித்து வாடகை தாய் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தார் சின்மயி.

இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சின்மயி உரையாடிய போது ’உங்கள் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள்’ என்று ஒரு ரசிகர் கேட்க, அதற்கு ’இந்த கட்டத்தில் எனக்கு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட ஆர்வமாக இல்லை, எனக்கு வெறுப்பு தான் அதிகமாக உள்ளது, என் குழந்தைகளையும் அதற்கு உட்படுத்த நான் விரும்பவில்லை. வைரமுத்துவின் ரசிகர்கள் ஏற்கனவே ’வைரமும் முத்தும் பிறந்து இருக்கிறது’ என்று வெறுப்பான சொற்களை கூறினர்.

குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்தால் ’ஏன் எனது குழந்தை வைரமுத்துவை போல் இல்லை’ என்று கேட்டாலும் கேட்பார்கள், அந்த அளவிற்கு தமிழ் கலாச்சாரம் உள்ளது என சின்மயி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு வலைத்தளவாசி ஒருவர் சின்மயிக்கு மெசேஜ் ஓன்று அனுப்பி இருந்தார், அதில் , வைரமுத்து சார் கூட நல்ல என்ஜாய் யா..என செய்தி அனுப்பியுள்ளார்.

பின்பு அந்த வலைதளவாசி தனது தவறை உணர்ந்து, சாரி மேடம் ரிப்ளை பண்ண மாட்டிங்கனு நினைச்சுட்டு பண்ணிட்டேன் மன்னித்து விடுங்க என கேட்க அதற்கு சின்மயி முடியவே முடியாது என மறுத்து விட்டார். இருந்தும், உங்க பையன் தெரியாம இப்படி சொல்லிட்டா மன்னிக்க மாட்டிங்களா, அனால் உங்க பையன் இப்படி பேச மாட்டான். சாரி எனக்கு எப்படி சொல்றதுனு தெரியல மேடம் என தனது தவறை உணர்ந்து தொடர்ந்து சின்மயிக்கு செய்தி அனுப்பி கொண்டே இருந்துள்ளார்.

ஆனால் சின்மயி இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருக்க, அதற்கு அந்த வலைதளவாசி, இவளோ சாரி கேட்டு ஒரு ரிப்ளை பண்ணிருக்கலாம் என்றும், மேலும், போடி.. வைரமுத்து சாரை கேட்டேன் சொல்லுங்க மேடம் ப்ளீஸ் என பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கடும் கோபம் அடைந்த சின்மயி, பொருக்கி புத்தி என்னைக்குமே பொருக்கி புத்தி தான், அதனால் தான் உன்ன மாதிரி பொறுக்கிய ஆளாக்குபவங்களையும், வளர்த்தவங்களையும் உன்னையும் மன்னிக்க முடியாது என பதில் அளித்த சினமயி. அவர்களுக்குள் நடந்த இந்த உரையாடலை புகைப்படமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தவர்.

பற்றா குறைக்கு இவன் என் பையன் மாதிரி நினைக்க வேண்டுமாம், இவன் மட்டும் எங்க வீட்டில் பிறந்து இருந்தால், நடு ரோட்ல வெட்டி புதைத்து, இந்த மாதிரி பொறுக்கிய பெத்த வயிறை அறுத்து போட்டிருப்பேன் என சின்மயி பதிவுக்கு. மற்றும் ஒரு வலைதளவாசி ஒருவர். அவன் கெஞ்சி தானேபதிவு போட்டிருக்கான், ஒரு பதில் பதிவு போட்டு இனி இப்படி பண்ணாதே என்று சொல்லியிருந்தான் உங்க மேல மரியாதை வந்திருக்கும்.

அதை விட்டுட்டு, அவன் கெஞ்சுவதை பார்த்து ரசிச்சிட்டு இருந்தா கோபம் படாம என்ன பண்ணுவான் உங்க மேல்தான் தவறு என கருத்து தெரிவித்த வலைதளவாசிக்கு பதில் அளித்த சின்மயி, கண்ணா உன்னை மாதிரி ஆம்பள கிட்ட உத்தமி பட்டம் வாங்க நான் தவம் கிடக்கல, எவளும் கிடைக்க மாட்டாள். இந்த மாதிரி ஊர் பொறுக்கி எல்லாம் திருத்துவது என் வேலை இல்லை, அவங்க பெத்தவங்க வேலை கிளம்புங்க என சின்மயி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.