அஜித்துக்கு ஏற்படும் அடுத்தடுத்து சிக்கல்… பெண் பாவம் பொல்லாது என சும்மாவா சொன்னாங்க..

0
Follow on Google News

துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கால் சீட்டும் பெற்றார் விக்னேஷ் சிவன். இதே நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், மீண்டும் ஒருமுறை முழு கதையும் கேட்டு எனக்கு கதை பிடிக்கவில்லை, இதில் என்னால் நடிக்க முடியாது என மறுத்து விட்டார் அஜித்.

படத்தில் கமிட்டாவதற்கு முன்பே கதையை கேட்டுவிட்டு தான் விக்னேஷ் சிவனை ஓகே செய்துள்ளார் அஜித், ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் இந்த நேரத்தில் அஜித் படம் பிடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டவுடன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இந்த படத்திற்காக உழைத்த விக்னேஷ் சிவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார். மேலும் அஜித்தை எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்தும் அதற்கு அஜித் உடன்படவில்லை.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய நயன்தாரா, இந்த படத்தில் இருந்து விக்னேஷ்சிவன் வெளியேற்றப்பட்டால் எங்களுக்கு அது சினிமாவில் மிகப்பெரிய அவமானமாக கருதப்படும். மேலும் சுமார் 8 மாதங்களுக்கு மேலாக தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக அதிகம் வேலை செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கப்படும் இந்த சூழ்நிலையில் இயக்குனரை மாற்றினால் எங்களுடைய எதிர்காலம் சினிமாவில் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும்.

உங்களுக்கு கதையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் நீங்கள் விக்னேஷ் சிவனிடம் சொல்லுங்கள், நிச்சயம் மாற்றம் செய்வார் என நயன்தாரா பேசியுள்ளார். ஆனால் அஜித் சார் வேண்டாம் என சொல்லிய பின்பு நாங்க என்ன பண்ண முடியும் என தயாரிப்பு தரப்பு நயன்தாராவுக்கு பதில் தந்துள்ளது. இதன் பின்பு அஜித்தை கன்வின்ஸ் செய்யும் முயற்ச்சியில் இறங்கிய நயன்தாரா, அஜித்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஆனால் அதற்கு அஜித், என்னுடைய ரசிகர்களை நான் திருப்திப்படுத்தும் வகையில் கதைகளை தேர்வு செய்ய வேண்டும், அந்த வகையில் இது போன்ற ஒரு குப்பை கதைகளில் நான் நடித்தால் என்னுடைய ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் அடைவார்கள். அதே போன்று என்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படும் வகையில் கதையை நான் தேர்வு செய்ய கூடாது என அஜித் தெரிவிக்க,

ஒரு கட்டத்தில் நயன்தாரா, ப்ளீஸ் சார் என, கண்ணீர் என கெஞ்சாத குறையாக நயன்தாரா பேசியும் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரே முடிவோடு நயன்தாரா கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்நிலையில் கதையை கேட்டு தான் முதலில் கணவர் விக்னேஷ் சிவனை கமிட் செய்தார் அஜித், ஆனால் அதே கதையை திரும்ப கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என்றால் விக்னேஷ் சிவன் மீது அஜித்துக்கு தனிப்பட்ட வெறுப்பு தான் காரணம் என்று கூட பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் அஜித், படத்தில் முழு கதையும் தயாரான நிலையில் பலவேறு காரணங்கள் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலே உள்ளது. கடந்த மே மாதம் தொடங்கப்பட வேண்டிய படப்பிடிப்பும் இன்னும் தொடங்கவில்லை.

இதற்கு இடையில் சம்பந்த பட்ட தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த ஐடி ரைடு படப்பிடிப்பை இன்னும் கால தாமதம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த படம் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், விக்னேஷ் சிவனை தன்னுடைய படத்தில் இருந்து அஜித் வெளியேற்றியதால், மனம் உடைந்து போன நயன்தாராவின் சாபம் தான் அடுத்தடுத்து அஜித் நடிக்கும் புதிய படம் தொடங்கப்படாமல் தாமதமாகி கொண்டிருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.