மாயா குரூப் கொடுத்த தொல்லை… கண்ணீருடன் பிக் பாஸில் இருந்து வெளியேறும் விசித்தரா..

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் அதிக வயதானவர்களில் ஒருவர் நடிகை விசித்திரா. 50 வயதுக்கு மேலான விசித்திரா பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார், அந்த வகையில் தற்பொழுது மிக குறைந்த வயதில் சக போட்டியாளர்களாக இருக்கும் மற்றவர்களிடம் நான் உங்களுக்கு ஒரு தாயைப் போல தான், அதனால் என்னை நீங்கள் அம்மா என்று அழைக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் பலரும் அவரை தன்னுடைய தாய் போன்று மரியாதையாக பழகி வருகிறார்கள், அதே நேரத்தில் வயது அதிகமாக இருந்தாலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியில் திறன்பட விளையாடி மக்களின் அமோக பாராட்டை பெற்று வருகின்றவர் விசித்திரா. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடி மக்களின் அமோக ஆதரவை பெற்று வரும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் டார்கெட் செய்து அவர்களை வெளியே அனுப்பி வருகின்றவர்கள் மாயா கேங்.

அந்த வகையில் தற்போது நடிகை விசித்திராவை கோபம் கொள்ளும் வகையில், தங்களை விட வயதானவரை, அதாவது தாய் ஸ்தானத்தில் இருக்கும் விசித்ராவை மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி, அதுவும் அந்த பெயரை விசித்ரா என்ற உச்சரிக்கும் போது கூட கிண்டலாக உச்சரிக்கும் வகையில் விசித்ரா என மாயா & கேங் கூப்பிடுவது, மேலும் நீங்கள் இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு தாய் போன்றவர் என ஒரு போலியான அம்மாவாக நடிக்கிறீர்கள் என்று தெரிவிக்கும் போது,

ஒரு கட்டத்தில் மனமுடைந்து கண்கலங்கி விடுகிறார் விசித்திரா, தொடர்ந்து விசித்திராவை கிண்டலாக பெயர் சொல்லி பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் அழைத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டாம் மேடம் என்று கூப்பிடுங்கள் என தன்னுடைய கோரிக்கையை வைக்கிறார் விசித்திரா. அதற்கு பதிலுக்கு பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் அப்படியானால் எங்களையும் நீங்கள் மேடம் என்று தான் அழைக்க வேண்டும் என ஒரு நக்கலான பதிலை தெரிவித்து மேலும் விசித்திராவின் மனம் நோகும்படி நடந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நிச்சயம் கமலஹாசன் வரும் சனிக்கிழமை பேசும் போது கண்டிப்பாக மாயா மற்றும் அவருடைய கேங்க்கு சப்போர்ட் செய்வது போல பெயர் சொல்லி கூப்பிடுவதால் என்ன தவறு இருக்கு என்று தான் கமல்ஹாசன் பேசுவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மாயா – பூர்ணிமாவால் தனக்கு ஏற்படும் அவமானங்களால் மனம் உடைந்த விசித்திரா,

ஒரு கட்டத்தில் கண்கலங்கி இந்த நேரத்தில் வெளியில் இருக்கும் என்னுடைய குடும்பத்தை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று அவர் கண் கலங்கும் போது, அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்நிலையில் பிக் பாஸ்சிடம் சென்ற விசித்தரா, நான் இந்த வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறேன், எனக்கு இங்கே இருக்கின்றவர்கள் ரொம்ப அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கண்கலங்குகிறார் விசித்திரா.

ஆனால் இதற்கு பிக் பாஸ் நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் அது உங்களுடைய விருப்பம், நீங்கள் செல்லலாம், ஆனால் உங்களுக்கென்று வெளியில் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு மரியாதை இருக்கு. உங்களுக்கு இருக்கும் இருக்கும் இந்த வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் உங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுபோன்று நடந்து கொள்கிறார்கள் என்று பிக் பாஸ் விசித்திராவை சமாதானம் செய்கிறார்.

அதற்கு விசித்திரா பிக் பாஸ் அட்வைஸை ஏற்றுக்கொண்டு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்கிறேன் என்று தெரிவித்து, தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் விசித்திரா. ஆனால் விசித்திரா இப்படி கண் கலங்கி மனம் வேதனை அடைந்த நிகழ்வு 24 நேரம் ஒளிபரப்பாகும் ஹாட்ஸ்பாட்டில் வெளியாகியுள்ளது. தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் விஜய் டிவியில் இது ஒளிபரப்பவில்லை.

இதற்கு காரணம் ஏற்கனவே விசித்திராவுக்கு நல்ல பெயர் இருக்கிறது, அதனால் இந்த நிகழ்வை ஒளிபரப்பினால் மேலும் விசித்திராவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும், மேலும் மாயா கேங் மீது மேலும் மக்களுக்கு கோவம் அதிகரிக்கும், என்கின்ற உள்நோக்கத்துடன் விஜய் டிவி ஒளிபரப்பவில்லை என்றும் ரசிகர்கள் பல குற்றச்சாட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது