பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்படும் நிக்சன்…. ரெட் கார்டை கையில் எடுக்கும் கமல்ஹாசன்…

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நேரமும் சண்டை, தகாத வார்த்தைகள் தான் இந்த சீசன் முழுவதும் நிறைந்து இருக்கிறது. இதனை எதிர்த்து சோசியல் மீடியாவில் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். பிரதீப் நியாயமாக விளையாடி வந்த நிலையில் அவருக்கு கை கொடுக்காமல் அநியாயத்திற்கு கைகொடுத்து விட்டார்கள் பிக் நிகழ்ச்சியினர்.

ரெட் கார்டு கொடுத்து வேண்டும் என்றே பிரதீப்பை திட்டம் போட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். ஆனால் இதுவே பிரதீப்பை விட அந்த வீட்டில் பல பேர் பல தவறான விஷயங்களை செய்து தப்பித்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது எல்லாம் ஏன் சேனல் நடவடிக்கை எடுக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் நிக்சன் தான். வினிஷாவை உருவ கேலி செய்தது பற்றி இது நாள் வரை கமல் ஹாசனோ அல்லது பிக் பாஸ் குழுவோ தட்டிக்கேட்கவில்லை. அதனை தொடர்ந்து ஐஷூவிடம், நிக்சன் நடந்து கொண்டது தொடர்பாக யாரும் கேள்வி கேட்கவில்லை. இந்நிலையில் இதை எல்லாம் தாண்டி நிக்சன் தற்போது ஒரு வேலை பார்த்து இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி இருந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீடு கல்லூரி ஆக மாறி இருந்தது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக போட்டியாளர்கள் பிரிந்து இருந்தனர். அதில் அர்ச்சனா, மாயா மற்றும் பூர்ணிமாவை வச்சு செய்து இருந்த நிலையில் நிக்சன் அர்ச்சனாவை வெச்சி செய்திருந்தார். இறுதியில் இந்த டாஸ்கின் முடிவில் நிக்சன் மற்றும் ரவீனாவிற்கு கோல்ட் ஸ்டார் வழங்கப்பட்டது.

இந்த டாஸ்க் முடிவடைந்த பிறகு அர்ச்சனா மற்றும் நிக்சன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன் நீங்கள் மற்றவர்களை மிகவும் கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். முதல் வாரத்தில் அழுது கொண்டு இருந்த நீங்கள் இப்ப வரைக்கும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள பத்தி நான் நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கும் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில், வினுஷா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரை நிக்‌சன் உருவக்கேலி செய்த சம்பவத்தை பற்றி அர்ச்சனா பேசியதால் நிக்சன் கோபமடைந்து ஒருமையில் பேசுகிறார். அதுமட்டுமின்றி நிக்சன் அர்ச்சனாவைப் பார்த்து “இதற்கு நீ லாயக்கில்லை” என்று கூற, அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “ஒரு பெண்ணை இப்படிலாம் கேவலமா பேசலாமா?” என்று கேட்கிறார். அவரோ அர்ச்சனாவைப் பார்த்து “வைல்டு கார்டு என்ட்ரியாக எப்படி வந்தியோ அப்படியே ஓடு” என்ற நிக்சன், “கருமம் மூஞ்சியைப் பாரேன்.. இதுலாம் ஒரு மூஞ்சியா” எனக் கூறுகிறார்.

மேலும், இருவருக்குமான வாக்குவாதத்தின் இறுதியில் ‘சொருகிடுவேன்’ என்று அர்ச்சனாவை பார்த்து நிக்சன் கூறுகிறார். ஒரு கட்டத்துக்கு மேலே சென்று அர்ச்சனாவை ‘நாயே’ என்று நிக்சன் கேட்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இப்படி அர்ச்சனா மற்றும் நிக்சன் சண்டை பிக்பாஸ் வீட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் நிக்சனுக்கு எதிராக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுமட்டும் இல்லாமல் இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், கமல்ஹாசனும் என்ன செய்யப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே போட்டியாளர் வினுஷா தேவியை உருவக்கேலி செய்து நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதும், நிக்சனுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. நிக்‌சன் இரண்டாவது நபராக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிக்‌சனின் இந்த செயலால் அவர் வெளியேற்றப்படுவாரா அல்லது நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கமல்ஹாசன் சும்மா இருப்பாரா.? நிச்சயம் ரெட் கார்டு கொடுத்து நிக்சனை வெளியேற்றுவாரா.? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.