பாத்ரூம்ல உள்ளே… பிக் பாஸில் ரவினா – மணி ஓவர் அட்டூழியம்… புட்டு புட்டு வைத்த அர்ச்சனா..

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50வது நாளான இன்று பிக் பாஸ் வைத்த ட்விஸ்டின் அடிப்படையில் மேலும் 3 வெளியேற்றப்பட்ட எக்ஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுக்க உள்ளனர் என தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வதற்கு இந்த வாரம் நடைபெற இருக்கும் டாஸ்குகளில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர் 14 பிக் பாஸ் போட்டியாளர்கள்.

இந்நிலையில் மணி ரவீனா குறித்து அர்ச்சனா ஒரு விஷயத்தை போட்டு உடைத்துள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த சீசனை விட இந்த சீசன் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்த நிலையில் இப்போது போட்டியாளர்கள் நாங்கள் கண்டண்டுக்காக செய்கிறோம் என்று வெளிப்படையாகவே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

காதல் கண்டண்டு கொடுக்கிறோம் என்று காது கூச வைக்கும் அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு அடிக்கடி சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கமல்ஹாசன் முன்னிலையில் கூட பலர் நாங்கள் கண்டெண்டுக்காக தான் சார் இப்படி எல்லாம் செய்தோம் என்று வெளிப்படையாக பேசியதும் உண்டு.

இப்படியாக இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் சில போட்டியாளர்களின் நடவடிக்கைகளை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதில் மணி மற்றும் ரவீனாவின் பழக்கம் குறித்து பலரும் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்து காதலர்களாக மணி, ரவீனா நடமாடி வருகின்றனர். ஏற்கனவே வெளியில் இருக்கும் போது இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் அவர்கள் தங்கள் காதலை தொடர்ந்து வருகின்றனர்.

மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொள்வது, லிவிங் ரூமில் அனைவர் முன்னிலையில் கொஞ்சுவது உட்பட சில நேரங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சில நேரங்களில் அவர்கள் அத்துமீறுவதாகவும் பார்வையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர் இந்த நிலையில் அங்கு அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள்ளே மணி மற்றும் ரவீனா இருவரும் செய்யும் செயல் குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார்.

அதில் மணி மற்றும் ரவீனா இருவரும் ஒரே பாத்ரூமிற்குள் சென்று ஹேர் கட் பண்ணி கொள்கிறார்கள். ஹேர் கலரிங் பண்ணி கொள்கிறார்கள் என்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை அர்ச்சனா வைத்திருக்கிறார். மேலும் அர்ச்சனா பேசுகையில், நான் சரி பாவம் வெளியே பெயர் கெட்டுப் போய் விடும், ஃபியூச்சர் மோசமாகி விடக்கூடாது என்பதற்காக மணி மற்றும் ரவீனாவை தனித்தனியாக கூப்பிட்டு இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறேன்.

அப்போ எல்லாம் சரி சரி என்று சொல்லிவிட்டு நேற்று என்னைப் பற்றி சொல்லும் போது மணி சொல்கிறான் நீங்க எங்க பிரைவேசிக்குள்ள எட்டிப் பார்த்த மாதிரி இருக்கு என்று சொல்கிறான். அது எப்படி சரியா வரும்?இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற மாதிரி பார்க்கில் யாராவது நடந்துக்கிட்டா கூட போலீஸ்காரங்க வந்து அடிச்சு துரத்திடுவாங்க. இது வீடு அதுவும் 24 மணி நேரமும் எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்கிற பொது நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இரண்டு பேரும் செய்யறது சரியா இருக்கா? இதுவெல்லாம் பாக்குறதுக்கு அசிங்கமா இருக்கு. இவங்க இதை பண்ணனும்னா வேற எங்கேயாவது போய் பண்ணட்டும். என் கண்ணு முன்னாடி பண்ணுனா எனக்கு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் ஆகுது. அதனால நான் கண்டிப்பா சொல்லத்தான் செய்வேன் என்று அர்ச்சனா கடும் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.