சில்லறை பயலே ..உன்ன செருப்பால அடிப்பேன்டா… பிக் பாஸ் வீட்டில் இன்னொரு முகத்தை காட்டிய கூல் சுரேஷ்..

0
Follow on Google News

பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாமல் மக்களை என்ட்டர்டெயின் செய்து கொண்டிருக்கிறது. இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்பதால் போட்டியாளர்களிடையேயான மோதலும் அதிபயங்கரமாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே பெரும் வாக்குவாதம், சண்டை வருவதுதான் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு.

அந்த வகையில், இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் புதுபுதுப் பிரச்சினைகள், கிசுகிசுக்கள் மூலம், ரசிகர்களை நன்றாக என்டர்டெயின் செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பிரதீப் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார். இப்போது அவர் கூல் சுரேஷிடம் வம்பிழுத்து ரகளையும் பண்ணியிருக்கிறார். இது இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தகராறில் பிரதீப் கூல் சுரேஷை படுமோசமாக பேசியிருக்கிறார். எனவே, மக்களுக்கு பக்காவான என்ட்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது. ஏற்கனவே, பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் 30ஆவது நாளுக்கான இன்றைய முதல் ப்ரோமோவிலேயே பிரதீப்புக்கும் கூல் சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கூல் சுரேஷ் தன்னுடைய பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவது போல காட்டப்பட்டது.

அந்த ப்ரோமோவின் தொடர்ச்சியாக, இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கூல் சசுரேஷை பிரதீப் அவமானப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கூல் சுரேஷ் எப்போவுமே தமிழன்டா டயலாக்கை சொல்லிக் கொண்டிருப்பார். இந்த டயலாக்கை பிரதீப் இழிவு படுத்தி கூல் சுரேஷை வம்பிழுத்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைகிறது. போட்டியாளர் விஷ்ணு, கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் ஆகிய மூவரும் கார்டன் ஏரியாவில் சண்டை போடும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன. அதில், பிரதீப் “தமிழன்டா வா… ச்சீ” என்று கொச்சையாகப் பேசுவதும், அதற்கு விஷ்ணு “எதுக்கு அப்படி பேசுற” என்று கேட்பதும், மீண்டும் “அப்படி தான் பேசுவேன்” என பிரதீப் சொல்வதும் சூடான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

பிரதீப்பின் திமிரான பேச்சைக் கேட்ட கூல் சுரேஷ், ஆவேசத்தில் கத்துகிறார். அதற்கு பிரதீப், “சில்லறை பய” என அவரை அவமரியாதையாக பேசவே, “யார் அவர் சில்லறை பையனா?” என கூல் சுரேஷுக்கு சப்போர்ட்டாக விஷ்ணு பேசுகிறார். கார்டனில் மூவரின் சத்தம் அதிகமாக கேக்கவே, வீட்டுக்குள் இருந்த அனைத்து போட்டியாளர்களும் பதறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள்.

பிரதீப் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறி பேசவே, கூல் சுரேஷ் கொந்தளித்து விட்டார். பிரதீப்பிற்கு பதிலடி கொடுக்க, “செருப்பால அடிப்பேன்” என கூல் சுரேஷ் கத்துகிறார். இருப்பினும், அடங்காத பிரதீப், சண்டையை தீர்த்து யார் சமாதானமாக பேச வந்தாலும் அவர்களையும் மரியாதை இல்லாமல் பேசுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

கூல் சுரேஷ் ஆத்திரத்தில் இருந்தாலும், அவரை சமாதனப் படுத்த முயற்சித்தவர்களிடம் “உங்களை அசிங்க அசிங்கமா பேசுவான் நீங்க அமைதியா இருப்பீங்க. அப்படி தானே” என மரியாதையுடன் பேசியிருக்கிறார். ஆனால், அனைவரும் பிரதீப்பை பார்த்து “ஒரே ஒரு சாரி கேளு” என்று சொல்ல, அதற்கு “உன்னுடைய வேலையை பாத்துட்டு போ மா” என மட்டுமரியாதை இல்லாமல் பேசி அடக்கியிருக்கிறார்.

இந்த அதிரடியான ப்ரோமோ பிக் பாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், மக்கள் இன்னைக்கு எபிசோடில் என்னென்ன நடக்கப்போகுதோ என்று ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே எண்டர்டெயின்மெண்ட்டுக்காக நடக்குதா இல்லை இது கலவர பூமியா என்று கமென்ட் செய்து வருகின்றனர்.