என்னாச்சு மஹாலக்ஷ்மி கணவருக்கு.? தீவிர சிகிச்சையில் மகாலக்ஷ்மி கணவர் ரவீந்திரன்..

0
Follow on Google News

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த 2022 செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரனின் உடல் பருமனை வைத்து பல்வேறு விமர்சனங்கள் மகாலட்சுமி மீது எழுந்தது. பெரும் கோடீஸ்வரர் ஆன ரவீந்திரனனிடம் இருக்கும் பணத்திற்காக தான் மகாலட்சுமி அவரின் உடல் பருமனை கூட பொருட்படுத்தமால் திருமணம் செய்து கொண்டார் என்கின்ற சர்ச்சையும் கிளம்பியது.

இருந்தாலும் தங்களுக்கு எதிராக வரும் சர்ச்சைகளை பொருட்படுத்தாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். மஹாலக்ஷ்மி அணில் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டு, ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கணவர் அணில் என்பவரை விவாகரத்து பெற்று பிரிந்தார்.மகாலட்சுமிக்கு முதல் கணவர் அணில் என்பவருக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தனது கணவருடன் கள்ள தொடர்பில் மஹாலக்ஷ்மி இருப்பதாக பரபரப்பு குற்றசாட்டுகளை வெளியிட்டார் சீரியல் நடிகர் ஈஸ்வரனின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ.

மேலும் மகாலஷ்மியை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னுடைய கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் போலீஸில் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.மேலும் அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயஸ்ரீ, தன்னுடைய கணவர் ஈஸ்வரன் உடன் சீரியல் நடிகை மகாலஷ்மி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார், அதே போன்று, மகாலட்சுமியும் ஈஸ்வரனும் கைபேசி மூலம் சாட் செய்த அணைத்து ரெகார்ட்களையும் காட்டினார் ஜெயஸ்ரீ,.

இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீ புகார் அளித்ததை ஒட்டி, திருவான்மியூர் மகளிர் போலீசார், ஈஸ்வரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.போலீஸ் புகார் அளிப்பதற்கு முன்பு ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று மனைவி அளித்த புகாரில் சிறைக்கு சென்ற ஈஸ்வரன் ஜாமினில் வெளியே வந்த பின்பு, மீண்டும் மஹாலஷ்மியை சந்திக்க முயற்ச்சி செய்துள்ளார், ஆனால் தொடர்ந்து ஈஸ்வரனை சந்திக்காமல் புறக்கணித்து வந்துள்ளார் மகாலக்ஷ்மி.

இந்நிலையில் தற்பொழுது ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மகாலக்ஷ்மி செம்ம ஜாலியாக இருந்து வரும் நிலையில், திருமணமாகி ஓராண்டில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பாலாஜி என்ற தொழிலதிபரிடம் 15.83 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டார். திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தால் பெரிய வருமானம் வரும் என கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பாலாஜி புகார் அவர் மீது கொடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக புழல் சிறையில் இருந்தார். பின்பு ஒரு மாதம் கடந்து ஜாமினில் வெளியே வந்தார். அதற்கு பிறகு பல யூடியூப் சேனலுக்கு தான் சிறையில் எவ்வாறு கஷ்டப்பட்டேன் என்பதை உருக்கமாக பேசி பேட்டி கொடுத்தார். இவர் தற்போது நடைபெற்று வருகின்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகின்றனர். ரவீந்தரின் பிக்பாஸ் விமர்சனங்களுக்கு ரசிகர்கள் சிலர் எதிராகவும், ஆதரவாகவும் கமெண்ட்கள் கொடுத்து கொண்டு உள்ளனர்.

சமீபத்தில் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் யூடியூப்பில் பிக் பாஸ் ரிவ்யூவை மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தவாறு ரிவ்யூ செய்தார். மேலும் தனக்கு நுரையீரலில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டுள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் நெஞ்சு பகுதியில் அதிக வலி இருப்பதாகவும் கூறினார்.

இதன் காரணமாக தான் ஒரு வாரம் ஐசியூவில் சிகிச்சை பெற்றதாகவும் தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் ஆக்ஸிசன் அளவு தனக்கு குறைவாக இருப்பதனால், மூச்சை சுவாசம் செய்வதற்காக முகத்தில் டியூப் போட்டுள்ளதாக ரவீந்தர் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் பலர் உடல்நலம் சரியாகும் வரை கஷ்டப்பட்டு பிக் பாஸ் விமர்சனம் செய்ய வேண்டாம் என்ற அறிவுரையையும், விரைவில் குணம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வரும் நிலையில், கமெண்ட் மூலம் நீங்களும் விரைவில் ரவீந்திரன் குணம் அடைய பிராத்தனை செய்யுங்கள்.