அடுத்த திருமணத்திற்கு ரெடி… வனிதா விஜயகுமார் கொடுத்த மகிழ்ச்சியான செய்தி..

0
Follow on Google News

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர். முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

அத்துடன் யூடிப் பேட்டிகள், தொகுப்பாளர் எனவும் பிசியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வனிதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த திருமணம் குறித்து பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், தொகுப்பாளர் அடுத்த திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள் என கேட்ட போது, என்னோட திருமணத்துல ஏன் எல்லாரும் ஆர்வமா இருக்கீங்க என கேட்டார்.

அதனை தொடர்ந்து இப்போ யாரையும் லவ் பண்றீங்களா என அடுத்த கேள்வி கேட்ட போது நான் என்னைய லவ் பன்றேன். சினிமாவை லவ் பண்றேன் என பதிலளித்தார். அதன்பின்னரும் விடாமல் அடுத்த திருமணம் எப்போ பண்ணுவீங்க என தொகுப்பாளர் கேட்க, மக்களுக்காக நான் அப்போ அப்போ கல்யாணம் பண்ணனுமா என அதிரடியாக பதில் கேள்வி எழுப்பியுள்ளார் வனிதா. அதனை தொடர்ந்து வனிதாவின் மேரேஜ் தொடர்பான கேள்வியை விடாத தொகுப்பாளர் உங்களுக்கு கருப்பான மாப்பிளை வேண்டுமா? அல்லது வெள்ளையான மாப்பிள்ளை வேண்டுமா? என கேட்டார்.

அதற்கு வனிதா பச்சையாக இருந்தால் திருமணம் செய்து கொள்வேன். அவதார் படத்துல ப்ளுல வர்ற மாதிரி பச்சையா இருந்தா கல்யாணம் பண்ணிப்பேன் என சொல்லி தொகுப்பாளரை கலாய்த்து விட்டார் வனிதா விஜயகுமார். அவரின் இந்த நேர்காணல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முன்னதாக வனிதா கடைசியாக திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உயிரிழப்புக்கு காரணம் அளவுக்கு அதிகமான மது பழக்கம்தான் என்றும் ஒரு தகவல் ஓடியது.