திரிஷா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்… கமல்ஹாசன் சொன்ன அந்த விஷயம்.. சோகத்தில் மூழ்கிய திரிஷா…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து பல வருடங்கள் டாப் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. ஆனால் நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பின்பு திரிஷாவுக்கு கிடைத்த வாய்ப்புகளை தட்டி பறித்த நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார்.

இதன் பின்பு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கினார். இதனை தொடர்ந்து த்ரிஷா பலமுறை மீண்டும் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்தபோது, நயன்தாரா இருக்கும் வரை அது முடியாது என்கின்ற ஒரு சூழல் உருவாகியது. இதை தொடர்ந்து தற்பொழுது நடிகை நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துள்ளதால், இந்த காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் திரிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தாலும் கூட, அடுத்தடுத்து அவருக்கான பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இந்த நிலையில் அஜித் – விஜய் இருவருடன் ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஒன் நடிகையாக வலம் வருவதற்கு திட்டமிட்ட திரிஷா. விஜய் – அஜித் இருவரிடம் தனக்கு இருந்த நெருக்கமான பழக்கத்தை வைத்து அவர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

இதில் விஜய் சிபாரிசில் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் திரிஷா. அதே போன்று அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இடம் பெற்று விட வேண்டும் என்பதில் மிக கடுமையாக முயற்சி செய்து வருகிறார் திரிஷா, ஆனால் லியோ படத்தில் லோகேஷ் கங்காராஜிடம் நேரடியாக விஜய் சிபாரிசு செய்து திரிஷாவுக்கு வாய்ப்பு பெற்று தந்தது போன்று, அஜித் நடிக்க இருக்கும் படத்தில் திரிஷா சிபாரிசுகாக இயக்குனருக்கு அஜித் அழுத்தம் கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.

அந்த வகையில் நடிகர் நடிகைகள் தேர்வு விஷயத்தில் இயக்குனரின் விருப்பத்திற்கே அஜித் விட்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் மெஹா ஹிட் அடித்த பின்பு, அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன், மற்றும் ஹெச். வினோத் இயக்கும் படங்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அடுத்து மணிரதத்தினம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன், ஏற்கனவே பொன்னியின் செல்வன் போன்ற மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ள மணிரத்தினம் அடுத்து கமல்ஹாசன் இயக்கம் படமும் மிக பெரிய பட்ஜெட் படமாக மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது.

இந்த படத்தில் இடம் பெறுவதற்கு திரிஷா முயற்சி செய்து வந்துள்ளார், இயக்குனர் மணிரத்தினமும் திரிஷாவை கமல் நடிக்கும் படத்தின் உள்ளே கொண்டுவருவதற்கு தயாராக இருந்துள்ளார், ஆனால் கமல்ஹாசன் தன்னுடைய படத்தில் த்ரிஷா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், திரிஷாவே வேண்டவே வேண்டாம், வேறு ஒரு நடிகையை தேர்வு செய்யுங்கள் என இயக்குனரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கான விளக்கத்தை கமல்ஹாசனிடம் இயக்குனர் கேட்ட போது, ஏற்கனவே திரிஷா உடன் இணைந்து நடித்த மன்மதன் அன்பு, தூங்காவனம் ஆகிய இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்தது. அதனால் சென்டிமெண்டாக திரிஷாவுக்கு தனக்குமான காம்பினேஷன் வெற்றியை பெற்று கொடுக்காது என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இதன் பின்பே மணிரத்தினம் – கமல்ஹாசன் ப்ரொஜெக்டில் இருந்து திரிஷா வெளியேற்ற பட்டுள்ளார்.

திரிஷாவுக்கு பதில் வேறு யாரை தேர்வு செய்யலாம் என நடந்த பேச்சுவார்த்தையின் போது நயன்தாரா குறித்த டிஸ்கேசனில் கமல்ஹாசன் நயன்தாராவா ஓகே என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இதன் பின்பே நயன்தாரா இந்த ப்ரொஜெக்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திரிஷாவுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு செண்டிமெண்ட் காரணமாக பறி போகியுள்ள நிலையில், தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட தனக்கு பதில் தன்னுடைய போட்டியாளர் நயன்தாராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிற கடும் சோகத்தில் நடிகை திரிஷாவை மூழ்கடித்து விட்டதாக கூறப்படுகிறது.