மது அருந்தாமல் திரிஷாவால் இருக்க முடியாதா.? அதற்காக அனைவரும் முன்னாடி இப்படியா.?

0
Follow on Google News

1999-ல் மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, திரையுலகில் சிம்ரன் தோழியாக ஜோடி திரைப்படத்தில் அறிமுகம் ஆனார் திரிஷா. 2002-ல் மெளனம் பேசியதே படத்தின் மூலம் தனது கதாநாயகி பயணத்தை தொடங்கினார் திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை முன்னணி நடிகர்களுடனும் நடித்த சாதனைக்கு சொந்தக்காரர்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகியாக வளம்வந்த திரிஷா, ஜெஸியாக விண்ணைத்தாண்டி வருவாயாவில் தனது உடல் மொழியில் தனி மாற்றத்துடன் ரசிகர்களை வசிகரித்தார். மன்மதன் அம்பு, மங்கத்தா, பாடிகார்ட் என தொடர்ந்த திரைப் பயணத்தில், 96 திரைப்படத்தில் ஜானுவாக அக்மார்க் முத்திரை பதித்தார் திரிஷா. தனி நாயகியாகவும் பயணிக்க தொடங்கிய திரிஷா ஆக்‌ஷன் காட்சிகளிலும், கொடியில் சைலண்ட் வில்லியாகவும் கலக்கியிருந்தார்.

இதில் திருப்புமுனையாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோழ தேசத்து இளவரசி குந்தவையாக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் திரிஷா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் ஆர்வம் காட்டிய திரிஷா, லியோவில் விஜய் ஜோடியாகவும், விடாமுயற்சியில் அஜித் ஜோடியாகவும், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாகவும் இன்னும் சில படங்கள் என பிசியாக இருக்கிறார்.

இந்த வருடம் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகியும் கூட. 90 கிட்ஸ் மட்டுமல்ல 20 கே கிட்ஸ்களையும் தனது ரசிகர் பட்டாளமாக கொண்டிருக்கிறார். திரிஷா எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தவர். அவர் பயங்கரமாக மது குடிப்பார் என்ற தகவல் பல காலமாகவே திரைத்துறையில் உண்டு. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான செய்யாறு பாலு திரிஷா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக அவரின் குடி பழக்கம் குறித்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், திரிஷா பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு குடிபோதைக்கு அடிமையானவர் என தெரிவித்து, அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, “சைதாப்பேட்டையில் ஒரு ஸ்லம் ஏரியாவில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. அந்தப் படத்தில் அந்த நடிகை நடித்து வந்தார். அப்போது குடிப்பதற்காக மதுவை வாங்கிட்டு வர சொன்னார். அப்போதெல்லாம் எலைட் ஷாப்கள் இல்லை.

பர்மா பஜாரிலிருந்து மதுபானம் ஒருவர் மூலம் வாங்கி வரப்பட்டு நடிகையிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொண்டார். அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது.” என்று செய்யாறு பாலு பேசியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகை திரிஷாவின் குடிப்பழக்கமும் அவரது திருமணம் தள்ளிப்போக முக்கியமான காரணம் என பயில்வான் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

மேலும் நடிகை திரிஷா குடித்துவிட்டு போதையில் கலாட்டா செய்ததாக அவரது வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் புகார் அளித்துள்ளதாகவும், ஒரு வேளை திருமணம் செய்துகொண்டால் இதுபோல் சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷா திருமணத்திற்கு நோ சொல்வதற்கான மற்றொரு காரணம் என பயில்வான் கூறி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்,

தற்பொழுது பத்திரிகையாளர் செய்யாறு ஒரு முன்னணி நடிகர், முன்னனி நடிகர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் மது வாங்கி வர வைத்து குடித்தார் என்றும், அந்த படத்தின் பெயர் நம்பரில் வரும் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளதற்கு, ஆறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்த போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கும் என பலரும் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.