சத்தமே இல்லாமல் இரண்டு குழந்தைக்கு தாயான சமந்தா …. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…

0
Follow on Google News

தெலுங்கு தமிழ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகை சமந்தா. 2010ஆம் ஆண்டு `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சமந்தா. அதன் பிறகு நடித்த யா சாயா சேசாவே படத்தின் மூலம் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை சமந்தா டேட் செய்ய தொடங்கினார்.

சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள். 2017ல் இருமுறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி ரசிகர்களின் அப்ளாஸை அள்ளியது. திருமணத்துக்கு பின்னரும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
பேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தா இறங்கி நடித்ததும், புஷ்பா பாடலுக்கு ஆடியதும் சைதன்யாவுடனான குடும்ப வாழ்க்கையில் பிரச்னையை உருவாக்கியது.

ஒரு கட்டத்தில் 4 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். ஜூன் 2022க்குப் பிறகு, சமந்தா சமூக ஊடகங்களில் பெரிய ப்ரேக் எடுத்தார். விவாகரத்து உறுதி செய்யப்பட்டதிலிருந்து சமந்தா தனது சமூக ஊடக சுயவிவரத்தை மாற்றினார். ஒவ்வொரு சமூக ஊடக கணக்கிலிருந்தும் அக்கினேனி என்ற டேக்கை மாற்றினார். அதுமட்டுமல்லாமல், நாக சைதன்யாவையும் அவர் பின் தொடரவில்லை.இதனால் அவரது உடல்நிலை குறித்து பல வதந்திகள் உருவாகியது.

மேலும் அவர் அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வந்தன. கடைசியாக அக்டோபர் 2022ல், தனக்கு டெர்மடோமயோசிடிஸ் இருப்பதாக அறிவித்தார். இதற்காக சினிமாவில் இருந்து ஆறு மாதம் விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதே போல் தன்னுடைய வழக்கமான ஜிம் ஓர்க் அவுட்டையும் சமந்தா துவங்கியுள்ளார்.

மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கிறங்கடிக்கும் அழகை புகைப்படங்களாக வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நடித்து வருவதால் சில நாட்களுக்கு பிரேக் வேண்டும் என நினைத்து நியூயார்க் சென்றார். தற்போது, மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி கொள்வதற்காக ஒரு சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார். அதுமட்டுமில்லாமல், அந்த சிகிச்சை பெறுவதனால் ஏற்படும் நன்மைகளையும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெரும் சமந்தாவை பார்த்ததும் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். ஆனால், அவருக்கு எந்த உடல்நல குறைவும் இல்லை என தெரிந்ததும் ரசிகர்கள் கூல் ஆகியிருக்கிறார்கள்.

விரைவில் சமந்தா அமேசான் பிரைம் வீடியோவுக்காக நடித்து முடித்துள்ள வெப் சீரிஸ் சிட்டாடல் தொடர் இந்திய பதிப்பில் வெளியாக உள்ளது. இதனை ராஜ் & டி.கே ஆகியோர் இயக்கி உள்ளனர். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் சென்னை ஸ்டோரிஸ் திரைப்படத்தில் சமந்தா ரூத் பிரபு ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பிரதியுஷா எனும் தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சமந்தா, பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவி புரிந்து வருகிறார். பல இதய அறுவை சிகிச்சைகளையும் நடத்தி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சமந்தா தெலுங்கானா அரசின் கைத்தறி ஆடைத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களின நிலையைச் சொல்லி, அவர்களின் வாழ்வியலுக்காக கைத்தறி விளம்பர தூதராக இலவசமாக நான் செயல்படுகிறேன் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திலிருந்து 2 பெண் குழந்தைகளை தத்தெடுக்க சமந்தா விரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சமந்தாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். விரைவில் இதனை பற்றி சமந்தா அவரின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.