விஜய் உடன் இணைந்து நடிக்க மறுத்த சகிலா… என்னடா இது தளபதிக்கு வந்த சோதனை…

0
Follow on Google News

நடிகை சகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். பின் இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. மேலும், சகிலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து இருக்கிறார். மேலும், இளமை போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

கடந்த இரண்டாம் சீசனில் சகிலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக சகிலா கலந்து கொண்டிருந்தார். ஆனால் போன வேகத்தில் வெளியே வந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சகிலா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சகிலா குரல் கொடுத்து வருகிறார். பிரச்சினைகளுக்கு அடுத்து சமீபத்தில் தற்போது யூடியூபில் நேர்காணல் எடுக்கும் வேலை செய்கிறார். மேலும் இவர் எப்போதுமே சர்ச்சை கருத்துக்களை பேசி மாதம் ஒருமுறையாவது ட்ரெண்ட் ஆகி விடுவார். சமீபத்தில் கூட அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல், சகிலாவையும், அவரது வக்கீலையும் தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் விஜய் குறித்து சொல்லி இருக்கும் ஒரு தகவலால், மீண்டும் அவர் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகர் விஜய் எப்போதுமே ரொம்பவே அமைதியான சுபாவம் உடையவர். ஷூட்டிங்கில் பெரிதாக யாருடனும் பேசிக்கொள்ளவே மாட்டார். இதை பல பிரபலங்கள் தங்களுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஆரம்பகட்டத்தில் ரொம்பவே ஜாலியாக இருந்தவர் தானாம் விஜய். அப்போதே சகிலாவுக்கும், விஜயிற்கும் ஒரு நட்பு இருந்ததாம். ஆனால் விஜய் வளர வளர பிறரிடம் நெருங்கி பழகுவதை குறைத்துக்கொண்டாராம்.

மேலும் இதுபற்றி சகிலா பேசியுள்ளதாவது, “அழகிய தமிழ் மகன் படத்துல நான் நடிக்கறதா இருந்துச்சு. அப்போ விஜய் யார் கூடவும் பேச மாட்டார். பேசமாட்டாருன்னு பீல் பண்ணாங்க. அப்போ விஜய் கூட நடிக்கும்போது எனக்கு காம்பினேசன் இருக்க கூடாது. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கற மாதிரி சீன் வேண்டாமுன்னு நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன். காம்பினேசனே கிடையாதுன்னு சொன்னாங்க.

நான் அப்படி ஏன் சொன்னேன்னா, நாங்க பழகி ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. அவரு யார்கிட்டேயும் பேச மாட்டாருன்னு சொல்றாங்க. அதனால, அவர் கூட காம்பினேஷன் வேண்டாமுன்னு சொன்னேன். அவங்களும் கண்டிப்பா காம்பினேசன் இல்லேன்னுதான் முதலில் சொன்னாங்க. ஆனால் முதல் நாள், முதல் ஷூட்டிலேயே அவரோட தான். விஜய் கூட தான் நடிக்கணும். ஆனா அவர் என்னை பார்த்ததும் ஹாய் சக்கீ அப்படீன்னாரு. வாவ், அப்படியே அந்த யூனிட்டே திரும்பி பார்த்தது.

நான் பதிலுக்கு ஹலோ சொல்றதா, என்னன்னு தெரியல. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. பக்கத்துல வந்து கூட ஹலோ எப்படி இருக்கீங்கன்னு கேப்பாருன்னு நினைச்சேன். தூரத்துல இருந்து அப்படி கூப்பிடுவாருன்னு நான் எதிர்பாக்கல. விஜய் என்னை அப்படி ஹாய் சக்கீன்னு கூப்பிட்டாரு. நான் எதிர்பாக்கவே இல்லை. தன் பின்னரே அந்த படத்தில் நடித்து முடித்து கொடுத்தேன்” என்று பேசியுள்ளார்.