இப்போதைக்கு குழந்தை வேண்டாம்… நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். சுமார் 7 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இருவருக்கு இடையில் காதலிக்கும் போது, சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்தாலும் அவர்களுக்குள் பேசி சரி செய்து கொண்டனர், ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வி அடைந்த நயன்தாரா முற்றாவது காதலில் மிக கவனமாக நடந்து கொண்டார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கும் போது கூட எந்த ஒரு சர்ச்சையில் சிக்கவில்லை, ஆனால் திருமணம் முடிந்து, அதுவும் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியது தொடங்கி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர். திருமணம் நடைபெறும் அரங்கு உள்ளே தொலைபேசி அனுமதியில்லை போன்று கடும் கட்டுப்பாடு காரணமாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் கூட நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது அதிருப்திக்கு உள்ளானார்கள்.

திருமணம் முடிந்து அடுத்தநாள் திருப்பதிக்கு சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன், அப்போது செருப்பு காலுடன் நயன்தாரா சென்றது அடுத்த சர்ச்சையில் சிக்கியது, மருத்துவர் ஒருவர் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது என பொது தளத்தில் தெரிவித்து அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி ஒரு பக்கம் நயன்தாரா குறித்து பல்வேறு சர்ச்சைகள் அவரது திருமணத்துக்கு பின்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்கையில்,

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தாய்லாந்து சென்று ஹனிமூன் கொண்டாடி வந்தனர், இவர்கள் இருவரும் ஹனிமூன் கொண்டாடிய புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்து அவரது ரசிகர்களை குஷி படுத்தினார்கள். ஹனிமூன் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய நயன்தாரா உடனே முன்பை சென்று அங்கே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.

ஹிந்தி படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து தன் கைவசம் இருக்கும் தமிழில் இரண்டு படம் மலையாளத்தில் ஒரு படம் தெலுங்கில் ஒரு படம் என அடுத்தடுத்து தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கும் நயன்தாரா இல்லற வாழ்க்கையை எப்போது தொடங்கி, குழந்தை குடும்பம் என்று செட்டிலாக போகிறார் என கேள்வி எழுந்துள்ள நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

அதில், தற்பொழுது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எப்படி இருக்கு என்று பார்ப்போம், அதனால் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என முடிவு எடுத்துள்ள புதுமன தம்பதியினர், அடுத்தடுத்து படவாய்ப்புகள் குறைந்தால், அதன் பின்பு சினிமாவுக்கும் மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு குழந்தை பெற்று கொள்ளலாம் என நயன்தாரா தெரிவிக்க, அதற்கு விக்னேஷ் சிவன் ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

மரணத்திற்கு முன்பு கடுமையான மனஉளைச்சலில் மீனா கணவர்… மீனா கணவர் மரணத்தில் உள்ள மர்மம்..!