நயன்தாராவின் ஆணவம்… கோவிலுக்குள் செருப்பு காலுடன் நயன்தாரா… கொந்தளித்த மக்கள்…

0
Follow on Google News

நயன்தாரா தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். தற்போது மார்க்கெட் இழந்து சில படங்களில் மட்டும் நடித்து வரும் நயன்தாரா சூட்டிங் ஸ்பாட்டில் அதிகமான குடைச்சலை இயக்குநர்களுக்கு கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கென்று ஆடம்பரமான கேரவன், பவுன்சர்ஸ், மேக்கப் மேன் என நயன்தாரா போடும் கண்டிஷன்கள் பல உள்ளதாம். மேலும் காலை 11 மணிக்கு வந்தால் 5 மணிவரை மட்டுமே தான் நடிப்பேன் என்று கூறுவதாகவும் வீட்டிற்கு முன்னதாகவே செல்ல வேண்டும் என்பதற்காக கடமைக்கு நடித்து கொடுத்து செல்வதாக குற்றசாட்டுங்கள் எழுந்துள்ளது.

கடந்த சில காலமாக நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும்தான் நடித்து வருகின்றார். அந்த வகையில் நயன் நடிப்பில் வெளியான படம் தான் அன்னபூரணி. இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகளாக பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருந்தார். இந்தியாவின் சிறந்த முன்னணி சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். குடும்பத்தில் தனக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை அப்பெண் அடைந்தாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

அன்னபூரணி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இப்படத்தில் உள்ள ஒரு காட்சியில் நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக, ராம பகவான் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று ஜெய் கூறிய காட்சிக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பிராமண பெண்ணாக நயன்தாரா இஸ்லாமிய மத படி நமாஸ் செய்யும் காட்சிகள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் மூலம் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது நயன்தாரா தனது அடுத்து கைவசம் இருக்கும் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நயன்தாரா வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் நடந்த படபிடிப்பில் நயன்தாரா செருப்பு கால்களுடன் கோவிலிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது அங்கே இருந்த ரசிகர்கள் நயன்தாரா, வெளியே வருவதை பார்த்து கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்திருக்கிறார்கள். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த பலர் கடவுள் இருக்கும் கோயிலில் செருப்பு அணிந்து வருவதா.? அங்கு இருக்கிற குருக்கள் என்ன செய்கிறார்கள். இது இந்துக்களின் கடவுளை அவமதிக்கும் செயல் என்று தங்களது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து முடித்துவிட்டு திருப்பதி சென்றிருந்தார். அப்போது அங்கு கோவிலுக்கு வெளியே உள்ள இடத்தில் பக்தர்கள் காலணிகள் அணிந்து நடக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள இடங்களில் காலணியுடன் சென்று போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள்.

இதற்கு சமூக வலைத்தளத்தில் மிகபெரிய விவாதமும் நடந்தது. அதன் பின் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோயில் நிர்வாகத்திடம் மன்னிப்பும் கேட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் நயன்தாரா கோவிலின் உள்ளே செருப்பு அணிந்து கொண்டு வந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கொந்தளிப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் கோவிலில் நயன்தாரா செருப்பு காலுடன் சென்றது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.