வடிவேலு வாய்க்கொழுப்பு… நடிகை ராதிகாவிடம் செமத்தியா வாங்கிய வடிவேலு…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மிக பெரிய உச்சத்தில் இருந்த வடிவேலு, தன்னுடைய ஆணவத்தின் காரணமாக, சுமார் பத்து வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல், தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கிய வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. குறிப்பாக நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் படு கேவலமாக இருந்தது என்று சொல்லும் அளவுக்கு படு மோசமாக இருந்தது.

மேலும் சமீபகாலமாக வடிவேலுவின் நடத்தைகள் குறித்து சக நடிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் வடிவேலு விஜயகாந்த் மறைவிற்கு வராததால் ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில், நடிகை ராதிகா வடிவேலுவின் மற்றொரு முகம் குறித்து மேடையில் வெளிப்படையாக பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால்,ரசிகர்கள் மத்தியில் வடிவேலு மீதான வெறுப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

வடிவேலு சினிமாவில் நடிக்க வந்த காலகட்டத்தில் உடுத்த கூட உடையில்லாமல் தவித்து கொண்டிருக்கையில், அவருக்கு உடை வாங்கி தந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் சினிமாவில் உச்சத்திற்கு சென்ற வடிவேலு தொடர்ந்து வருடத்திற்கு 10 படங்கள் 15 படங்கள் என்று ஏராளமான படங்களில் நடித்து வந்தார். இவ்வாறு சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட வடிவேலுவுக்கு கூடவே தலைக்கனமும் அதிகரித்தது.

தான் என்ற கர்வத்தால் தன்னை சினிமாவில் வளர்த்து விட்ட பிரபலங்களை மறந்துவிட்டார். மேலும் தன்னுடன் நடித்த சக நடிகர்களை இழிவாக நடத்தி வந்திருக்கிறார். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் உதவியால் சினிமாவில் வளர்ச்சி அடைந்த வடிவேலு, அரசியல் மேடையில் கடும் சொற்களால் கேப்டனை தாக்கிய சம்பவம் வடிவேலுவின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தியது.

அப்போது இருந்து வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. வருடத்திற்கு பத்து பதினைந்து படங்கள் பண்ணிக் கொண்டிருந்தவர், இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்து வந்தார். சொல்லப்போனால், கேப்டனை அவமானப்படுத்தி அரசியல் மேடையில் பேச ஆரம்பித்ததில் இருந்து வடிவேலுவின் வீழ்ச்சி காலம் தொடங்கியது என்று கூறலாம். சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை.

சமீபத்தில் கூட செய்தியாளர் சந்திப்பின்போது, நீங்கள் என் விஜயகாந்த் இறப்பிற்கு வரவில்லை என்று வடிவேல் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், வடிவேலு அதற்கு பதில் அளிக்காமல் அடுத்த கேள்வி அடுத்த கேள்வி என்று சமாளித்துக் கொண்டிருந்தார். இந்த சூழலில் நடிகை ராதிகா வடிவேலுவின் உண்மை முகம் இதுதான் என்று மேடை ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது “வடிவேலுவை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒருமுறை விமானத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அவரிடம் எனது கணவர் சரத்குமார் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனது மகன் ராகுல் வடிவேலுவிடம், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் எங்கள் அப்பா படத்தில் நடிக்கிறீர்களா என ஆசையோடு கேட்டான்.ஆனால் அவரோ சிரித்துக்கொண்டே, அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லைப்பா என்றார்.

இவரு வாழ்க்கை கொடுக்கிறாராம். இப்ப நீ எங்க இருக்க நாங்க எங்க இருக்கோம். இத்தனை வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். சரத்குமார், விஜயகாந்த், பிரபு ஆகியோர் இருந்தால் தைரியமாக நான் ஷூட்டிங் செல்வேன். ஏனெனில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். ஒரு பிரச்னை என்றால் முன்னே வந்து நிற்பார்கள்” இன்று வடிவேலுவை கிழித்து தொங்க விட்டு ராதிகா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.