விக்னேஷ் சிவனை நம்பி தலையில் துண்டை போட்ட நயன்தாரா… பல கோடி போச்சே.. கடும் அப்செட்டில் நயன்தாரா…

0
Follow on Google News

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார், அ பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாரா மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான் அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையு ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர், உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்

முதல் முறையாக நடிகை நயன்தாரா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்த திரைப்படம் தான் ஜவான். முதல் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் நயன்தாராவிற்கு தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அது தான் தற்போது நடந்துள்ளது. ஆம், புதிய பாலிவுட் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். சஞ்சய் லீலா பங்ஷலி இயக்கத்தில் உருவாகும் பைஜூ பவ்ரா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக ரன்வீர் சிங் நடிக்கிறார். இதுவரை ரன்வீர் சிங் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் பக்கம் போன நயன்தாரா கவர்ச்சியில் மீண்டும் இறங்கி உள்ளது, விக்னேஷ் சிவனுக்கு பிடிக்க வில்லையாம். மீண்டும் பாலிவுட்டில் படம் நடித்தால் இன்னும் கவர்ச்சி கூடுமோ என்ற பயத்தில் நயன்தாரவை பிசினஸ் பக்கம் இழுத்துள்ளார்.

இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். அதன் விளம்பர புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகியது. அதையடுத்து நயன்தாரா FEM19 தனது பிராண்ட் நேமில் நேப்கின் தயாரிக்கும் தொழிலை தனது கணவருடன் சேர்ந்து சொந்தமாக துவங்கினார். இப்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்போதே தொழில் துவங்கி எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கலாம் என நினைத்து பலகோடிகள் முதலீடு செய்து அடுத்தடுத்து தொழில் துவங்கிய நயன்தாராவுக்கு சினிமாவில் பெரும் சறுக்கல் வந்துவிட்டது.

ஆம், தொழில் துவங்கி அவரது சினிமா வாழ்க்கை பாதாளத்தில் விழுந்துவிட்டது. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டது. கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ‘KH234’ படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜவான்’ மற்றும் ‘இறைவன்’ படங்களுக்குப் பிறகு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். மேலும், தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்தார். 2022-ம் ஆண்டு வெளியான ‘கனெக்ட்’ படத்திற்காக நயன்தாரா 8 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. நகைக்கடை விளம்பரத்தில் நடிக்கும் நயன்தாரா விளம்பரங்களுக்கு ரூ.5 கோடி வாங்குகிறார்.

தற்போது தொழில் அனைத்தும் நஷ்டம் அடைந்துள்ளதால், மீண்டும் பாலிவுட் பக்கம் செல்ல இருக்கிறாராம் நயன்தாரா. இதனால் விக்னேஷ் சிவன் மீண்டும் கிளாமர் பக்கம் போவார் என்று பயந்து உட்காந்துள்ளாராம். இதனால் தற்போது விக்னேஷ் சிவன் தலை உருண்டு வருகிறது. ஆரம்பத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ஏகே62 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்படத்தின் கதைக்களம் அஜித்துக்கு பிடிக்காமல் போகவே விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு விழாத அடியே இல்லை என சொல்லும் அளவிற்கு பல அடிகளை வாங்கி குவித்து வருகிறார்.