விரட்டிவிட்ட விஜய்… அஜித்திடம் அடைக்கலம் ஆகும் அட்லீ… இனிமே எங்க அண்ணன் அஜித் தான்…

0
Follow on Google News

அட்லி மனைவி பிரியாவின் வளைகாப்பு கடந்த வருடம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு அட்லி – விஜய் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது அட்லி விஜய்க்காக ஒரு கதையை தெரிவித்துள்ளார். அந்த கதையை விஜய் ஓகே செய்தவர். ஜவான் படத்தை முடித்துவிட்டு இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்ய வலியுறுத்தியுள்ளார் விஜய்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு அட்லீ இயக்கும் படத்தை தொடங்கலாம் என அட்லீக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் மீண்டும் அட்லீ இணையும் படம், அட்லியின் மனைவி வளைகாப்புக்கு அட்லீ – பிரியா தம்பதியினருக்கு கிப்ட் போன்று அமைத்தது. இந்த படத்தை சன் பிக்ச்சர் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் விஜய்க்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் தருவதற்கு முன் வந்த சன் பிக்ச்சர் நிறுவனம் அட்லீ கேட்ட அதிக சம்பளத்தை கொடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் விஜய்யிடம் ஓப்பனாகவே அட்லீ இயக்கும் படத்தை நாங்கள் தயாரிக்க முன்வரவில்லை என சன் பிக்சர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே விஜய் – அட்லீ கூட்டணியில் பிகில் படத்தை தயாரித்து பெரும் நஷ்டத்தை சந்தித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அப்போது மீண்டும் உங்கள் தயாரிப்பில் ஒரு படம் நடித்து தருகிறேன் என உறுதியளித்து இருந்தார் விஜய். இந்த நிலையில் மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுக்க முன் வந்துள்ளார் விஜய்.

ஆனால் ஏற்கனவே பிகில் படத்தில் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அட்லீ தான் காரணம், அதனால் மீண்டும் அட்லீ வேண்டாம் என விஜய்யிடம் ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தும் ஒரு முறை அட்லீயை அழைத்து கதை கேட்டு பாருங்க என அட்லீக்காக விஜய் சிபாரிசு செய்ய, ஏஜிஎஸ் நிறுவனம் வேண்டவே வேண்டாம், என அட்லீயிடம் கதை கேட்க கூட அவர்கள் விரும்பவில்லை.

இதன் பின்பு ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் ஒரு கதை கேட்டு வைத்துள்ளோம் அந்த கதையை நீங்களும் கேளுங்கள் என வெங்கட் பிரபுவை விஜய்யிடம் அனுப்பி வைத்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். இதன் பின்பு வெங்கட் பிரபுவிடம் விஜய் கதை கேட்க, தன்னுடைய அரசியல் வருகைக்கு ஏற்ப படம் இது தான் என உடனே கதையை ஓகே செய்துள்ளார் விஜய்.

இப்படி தான் அட்லீ விஜய் படத்தில் இருந்து வெளியேற்ற படுவதர்க்கும், வெங்கட்பிரபு என்ட்ரி கொடுக்கவும் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பு சன் பிக்ச்சர் , எஜிஎஸ் போன்ற நிறுவனங்கள் அட்லீ வேண்டாம் என்று தெரிவித்தாலும், விஜய் உறுதியாக இருந்திருந்தால் வேறு ஒரு தயாரிப்பாளர் மூலம் அட்லீ ப்ரொஜெக்ட்டை தொடங்கியிருக்கலாம், ஆனால் அட்லீ மீது தயாரிப்பாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் ஏற்று கொண்டு, அட்லீயை கழட்டி விட்டு விட்டார் விஜய் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை விஜய் புராணம் பாடி வந்த அட்லீ தற்பொழுது அஜித் புராணம் பாட தொடங்கியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ.. எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். முதன்முதலில் என்னை அஜித் சாரிடம் அறிமுகப்படுத்தியது நயன்தாரா தான். ஆரம்பம் ஷூட்டிங் ஸ்பாட்ல தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இவர் தான் என்னுடைய இயக்குனர் என நயன் என்னை அஜித்திடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் என்னைப்பார்த்துவிட்டு, என்ன ஸ்கூல் முடிச்சிட்டீங்களானு கிண்டல் பண்ணினார். என் அம்மாவை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு கதை சொல்லனும்னு இரண்டு மூன்று முறை முயற்சி செய்தேன். அது சரியாக அமையவில்லை. கண்டிப்பா அவரோட படம் பண்ணனும்னு ஆசை இருக்கு. அவர் ஓகேனு சொல்லிட்டா படம் பண்ணிரலாம். அஜித் சார் மாஸ் ஹீரோ அதனால் அவருக்கு தகுந்த மாதிரி கதை இருக்கும். அவருக்காக என்னிடம் பயங்கரமான ஸ்கிரிப்ட் இருக்கு என அட்லீ பேசியுள்ளார்.

இந்நிலையில் விஜய் கழட்டிவிட்டு விட்டதால், அஜித்தை வைத்து படம் பண்ணலாம் என அட்லீ அஜித் விட்டு கதவை தட்டியுள்ளார், ஆனால் அங்கே வாய்ப்பு இல்லை என்றதும் என்னை தேடி வருகிறாயா என அட்லீயிடம் கதை கேட்க கூட அஜித் விரும்பவில்லை. இருந்தாலும் அஜித் புகழ் பாடினால் வாய்ப்பு கிடைக்கும் என அட்லீ இவ்வாறு பேட்டி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.. இது போன்ற செய்திகளை உடனுக்குடன் whatsappல் தெரிந்து கொள்ள கீழே உள்ளே whatsapp லிங்கை க்ளிக் செய்து subscribe செய்யவும். https://whatsapp.com/channel/0029Va9TxUhFSAtAnx8qic2I