ஒரு மனதாக பிரியும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா… இதுக்கு மேல் தாக்கு பிடிக்காது….

0
Follow on Google News

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் சமீப காலமா அடிக்கடி மீடியாவில் அதிகம் தென்படுகின்றனர். சமீபத்தில் கூட அவர்கள் தொடங்கிய ‘Femi9’ பிசினஸ் தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி, பிரச்சனை ஏற்பட்டு பிரிய வாய்ப்புள்ளதாக ஜோதிடர் வேனுசாமி என்பவர் பகிர் கிளப்பியுள்ளார்.

ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் ஹீரோயின் ஆக நடித்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. அதே போல் போடா போடி, நானும் ரவுடிதான் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் 2015 இல் நடைபெற்ற நானும் ரவுடிதான் படத்தின் ஷூட்டிங் முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

சுமார் ஏழு வருடங்கள் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடி 2022 ல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணம் முடித்த நான்கு மாதத்திலேயே வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்ட இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.காதல், கல்யாணம், குழந்தைகள் குடும்பம் என்று தங்கள் வாழ்க்கையை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர், தங்களது சினிமா கரியரிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்பு தனது அடுத்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து எடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான வேளைகளில் விக்னேஷ் சிவன் தீவீரமாக சுமார் 6 மாதங்களுக்கு மேல் உழைத்த நிலையில், தேடிரென விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டார் அஜித். நயன்தாராவை திருமணம் செய்த நேரமா என்னமோ தெரியல, அஜித் பட வாய்ப்புக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற கதை போல் விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கிடையில் நடிகை நயன்தாராவும் திருமணத்திற்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இரண்டு ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. ஆனால் நடிகை நயன்தாரா நடித்த அத்தனை படங்களும் படுதோல்வி அடைந்தன. சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் கூட பிளாப் தான். அதுமட்டுமில்லாமல், படத்தில் இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அன்னபூரணி படம் netflix தளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.

இப்படி, திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளாக இந்த தம்பதியினர் பல ரூபங்களில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சினிமாவில் மட்டுமின்றி இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, இந்த தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த போது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முறையான விதிகளை இவர்கள் கடைப்பிடித்தார்களா என்றும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிரச்சனைகள் எழுந்தன.

அதேபோல், இவர்களின் திருமண வீடியோவை ஓ டி டி தளத்தில் வெளியிட திருமணத்திற்கு முன்பு ஓகே சொல்லி முன் வந்த பிரபல நிறுவனம், திருமணம் முடிந்தது இவ்வளவு பணம் கொடுத்து எங்களால் வாங்க முடியாது என கைவிரித்து சென்றுவிட்டனர், இதனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட நயன்தார கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதாக சர்ச்சையில் சிக்கினார்.

இப்படி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் கல்யாணம் முடித்ததில் இருந்து சினிமாவிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வருவதால், விரைவில் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய வாய்ப்புள்ளது என்று ஜோதிடர் வேலுசாமி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே சமந்தா நாக சைதன்யா தம்பதியினரின் விவாகரத்து பற்றி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.