நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் தாய்லாந்தில் நடந்த உச்சக்கட்ட சண்டை… என்ன காரணம் தெரியுமா.?

1
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் முக்கிய பிரபலங்கள் மட்டும் பங்கேற்க, இவர்களின் திருமணம் நடைபெற்றது, திருமணம் முடிந்து அடுத்தநாள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து கொண்ட புதுமண தம்பதியினர், ஹனிமூன் கொண்டாட தாய்லாந்து சென்று அங்கே இருவரும் செம்ம ஜாலியாக இருந்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காற்று வாக்கில் இரண்டு காதல் இந்த படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர், இந்த படத்தில் பணியாற்றிய போது நடிகை சமந்தா உடன் நெருக்கமாக பழகியுள்ளார் விக்னேஷ் சிவன், பின்பு இருவரும் நயன்தாராவுக்கு தெரியாமல் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது, பார்ட்டி முடிந்ததும் ஒரே காரில் இருவரும் ஜோடியாக செல்வதுமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் நயன்தாரா கவனத்துக்கு சென்றதும், விக்னேஷ் சிவன் – நயன்தார இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் விக்னேஷ் சிவன் ஒரு வழியாக நயன்தாரா கையில் காலில் விழுந்து இனிமேல் இது போன்ற தவறு நடக்காது என சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு நயன்தாரா சில படங்களில் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்று சம்பளம் வரை பேசப்பட்டு இருந்தது, அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது, ஆனால் தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கிய படங்களில் மட்டும் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இதுவரை படப்பிடிப்பு தொடங்காத படங்களில் நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை மாற்றம் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு திருமணம் முடிந்து விட்டதால் இந்த முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை தேர்வு செய்ய அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தாய்லாந்தில் இருந்தபடியே புதிய படத்தில் அஜித் சார் ஜோடியாக சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என மனைவி நயன்தாராவிடம் ஆலோசித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

சமந்தா பெயரை கேட்டதும் டென்ஷன் ஆன நயன்தாரா, என்ன நினைத்து கொண்டிருக்கிறாய் நீ, என்னை ஏமாற்றலாம் என்று திட்டம் ஏதும் இருக்கா.? என கேட்க, அப்படியெல்லாம் இல்லை உங்களுக்கு வேண்டாம் என்றால் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கலாம் என விக்னேஷ் சிவன் தெரிவித்தும் நயன்தாரா கேட்பதாக இல்லை, அன்று முழுவதும் டென்ஷனாக மூட் அவுட்டில் இருந்த நயன்தாரா அடுத்த நாள் தான் சமாதனம் ஆனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதற்குள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது, இனி விக்னேஷ் சிவன் அடுத்தடுத்து படம் இயக்க தொடங்கியதும், நயன்தாரா போட போகும் கண்டிஷனில் இவர்களுக்கு என்ன பிரச்சனைகளாம் ஏற்பட போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்லும் என்கின்றனர் தாய்லாந்தில் நடந்த நயன்தாரா -விக்னேஷ் பிரச்சனையை கேள்வி பட்டவர்கள்.

ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா அஜால் குஜால்… கள்ளகாதலர்கள் போல் கையும் களவுமாக மாட்டியது எப்படி.?

1 COMMENT

Comments are closed.