ஐஸ்வர்யா – தனுஷ் டேட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல்… இருவரும் டேட்டிங்கிற்காக போட்ட மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா.?

1
Follow on Google News

நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து தங்களுடைய 17 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து, சுமார் கடந்த 6 மாதங்களாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினர்க்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், குழந்தைகள் நலன் கருதி பிரிந்த தாம்பதியினர் மீண்டும் இணைய வேண்டும் என இரண்டு குடும்பத்தினர் செய்த முயற்சி தோல்வியை தழுவியது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு இரண்டு குழந்தைகளும் தாய் ஐஸ்வர்யா கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர், தனுஷ் அவ்வவ்போது தன்னுடைய இரண்டு மகன்களையும் வெளியில் அழைத்து சென்று மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தனுஷ்க்கு போட்டியாக மகனுடன் பாசமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தார் ஐஸ்வர்யா, ஆனால் அம்மா , அப்பா இருவருடன் இணைந்து மகிச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் இரண்டு குழந்தைகளின் ஆசையாக இருந்தது.

இந்நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த சில நாட்களில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் தனுஷ், ஆனால் ஐஸ்வர்யா நிராகரித்ததாக கூறப்படுகிறது. இருந்தும் ஐஸ்வர்யா இசை ஆல்பம் வெளியிட்ட போது தனுஷ் வாழ்த்து தெரிவிக்க, அடுத்த நாள் ஐஸ்வர்யா தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார், இதனால் இந்த தம்பதியினர் மீண்டும் இணைவதில் சாத்தியம் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் சுமார் 7 வருடங்களுக்கு பின்பு திருசிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் அனிரூத், இந்த சூழலில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரையும் சந்திக்க வைத்து பேச வைத்துள்ளார் அனிரூத், இதன் பின்பு ஏற்கனவே பிரிவதற்கு முன்பு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சென்னை ஆரியபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர், இவர்கள் பிரிந்த பின்பு இந்த வீட்டிற்கு இருவரும் வராமல் இருந்து வந்த நிலையில்,

சமீப காலமாக அடிக்கடி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மட்டும் ரகசியமாக வந்து போகும் தகவல் வெளியாகியுள்ளது, இருவரும் சமீப காலமாக ஆரியபுரத்தில் உள்ள வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தும் விவகாரம் வெளியில் கசிந்து தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இனி ஆரியாபுரம் வீட்டிற்கு இருவரும் சென்றால் பத்திரிகையாளர்கள் கண்ணில் பட்டு அது செய்தியாக வெளியாகி விடும் என்பதால் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளனர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும்.

அதாவது தற்பொழுது இருவரும் சினிமா துறையில் தற்பொழுது பணியாற்றி வருவதால், ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் தேவைப்படும் போதும் தங்கி கொள்வது என்றும், படப்பிடிப்பு காரணமாக இருவரும் ஆந்திராவில் தனி தனியாக பிசியாக இருக்கிறார்கள் என வெளியில் தகவல் கசியட்டும் என மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி ஆரியபுரம் வீட்டிற்கு இருவரும் ரகசியமாக வந்த தகவல் கசிந்ததும் தற்பொழுது அங்கே வருவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இருவரும் வெளிப்படையாகவே அவர்கள் வீட்டிற்க்கு செல்லலாம், கணவன் – மனைவி எதற்காக, காதலர்கள் டேட்டிங் போவதற்காக ரகசியமாக செல்வது போன்று தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் ரகசியமாக குடும்பம் நடந்த வேண்டும் என்றும், இருவரும் மீண்டும் இணைகிறோம் என அறிவித்துவிட்டு கணவன் மனைவியாக ஜோடியாக வருவதால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என பொது தளத்தில் கேள்விகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போதையில் மிதக்கும் கீர்த்தி சுரேஷ்… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு… என்னாச்சு கீர்த்தி சுரேஷ்க்கு தெரியுமா.?

1 COMMENT

  1. They wanted to get separated for Aishwarya album publicity,now it didn’t workout well they are uniting again, any how good news

Comments are closed.