நோ… ஹனிமூன்… நயன்தாரா அதிரடி முடிவு… சோகத்தில் விக்னேஷ் சிவன்….என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி திருமண பந்தத்தில் இணைந்து, இதற்கு முன்பு காதலர்களாக வலம் வந்தவர்கள், தற்பொழுது கணவன் – மனைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். காதலர்களாக இருந்த போது சந்தோசமாக இருந்த விக்னேஷ் சிவன், திருமணத்துக்கு பின்பு நயன்தாரா எடுத்த சில அதிரடி முடிவுகளால் சோகத்தில் முழ்கியுள்ளார்.

ஏற்கனவே நடிகர்கள் சிம்பு, பிரபு தேவா இருவரை காதலித்து தோல்வியடைந்த நயன்தாரா, இதில் பிரபுதேவா உடனான இரண்டாவது காதல் திருமணம் வரை சென்று நின்றது. பிரபு தேவாவை திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவில் இருந்து விடைபெற்ற நயன்தாரா, அந்த திருமணம் நடைபெறாததால் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர், மூன்றாவதாக விக்னேஷ் சிவனை காதலித்தார்.

ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வி அடைந்த நயன்தாரா இந்த முறை கவனமாக இருந்து, கடந்த இரண்டு காதல் தோல்விகளில் இருந்து கற்று கொண்ட படங்களின் முன்றாவது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இடையில் சிறு சிறு பிரச்சனை இருந்து வந்தாலும் சமரசம் செய்து மூன்றாவது காதலில் வெற்றி பெற்றுள்ளார் நயன்தாரா. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டுள்ள நயன்தாரா.

அவருடைய கைவசம் ஷாருகான் நடிப்பில் அட்லீ இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இதற்காக உடனே முன்பை செல்லும் நயன்தாரா, தொடர்ந்து அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த பட பிடிப்பு முடிந்தவுடன் நயன்தாரா எடுத்த முடிவு தான் தற்பொழுது விக்னேஷ் சிவனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற இதற்கு முன்பு நயன்தாரா சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அது அவரை எலும்பும் தோலுமாக, வத்தலும் தொத்தலுமாக காட்சியளிக்க வைத்துள்ளது. இதனால் வயதான முதிர்கன்னி போன்று காட்சியளிக்கும் நயன்தாரா, கேரளாவில் உள்ள ஆயுவேத சிகிச்சை மையத்தில் சுமார் ஆறு மாதம் அங்கே தங்கி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுர்வேத சிகிச்சையின் போது தூங்கும் நேரம், என்ன உணவு சாப்பிடுவது, எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும், தண்ணீர் எவ்வளவு அருந்த வேண்டும் என்பது அனைத்தும் அங்கே இருக்கும் மருத்துவர்கள் ஆலோசனை படி தான் செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் முடிந்த உடன் இதுவரை போகாத எதாவது ஒரு நாட்டிற்கு சென்று ஹனிமூன் கொண்டாடலாம் என கனவில் இருந்த விக்னேஷ் சிவனிடம், நோ.. ஹனிமூன் என்று தெரிவித்துவிட்டு தன்னுடைய அடுத்தடுத்து நடவடிக்கைகள் என்ன என்பதையும் தெரிவித்துள்ளார் நயன்தாரா. இதனால் ஹனிமூனை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என கனவில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் சுமார் ஆறு மாதம் கேரளாவில் தங்கி நயன்தாரா ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால். சுமார் 7 வருடங்களாக நயன்தாரா உடனே பயணம் செய்து கொண்டிருந்த விக்னேஷ் சிவன், அந்த ஆறு மாதம் காலம் மனைவி நயன்தாராவை விட்டு பிரிந்து எப்படி இருப்பது என்கிற சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட சினிமா பிரபலங்கள்.. யார் அந்த பிரபலங்கள் தெரியுமா.?