அவள் ஆண்ட்டி சூப்பர் ஸ்டார்… நயந்தாரா மானத்தை வாங்கிய திரிஷா.. இரவு பார்ட்டியில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டு, கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஹனிமூன் என சந்தோசமாக இருந்து விட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியவர் தற்பொழுது முன்பையில் நடக்கும் ஷாருகான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார், இதனை தொடர்ந்து கைவசம் இருக்கும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர் நடிகை திரிஷா, தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசி நடிகையாக இருந்த வந்த திரிஷாவுக்கு தொழிலதிபர் அருண்மணி என்பவருக்குக்கு திருமணம் நிச்சயம் நடந்து அந்த திருமணம் பாதியில் நின்றது. இந்த நிகழ்வுக்கு பின்பு திரிஷா நடித்த படங்கள் தோல்வியை சந்திக்க அவருடைய மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்தது, இதே போன்று பிரபு தேவாவை காதலித்து வந்த நயன்தார காதல் திருமணம் வரை சென்று பாதியில் நின்றது.

இதன் பின்பு மீண்டும் ராஜாராணி படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ- என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்து மற்ற நடிகைகளை ஓரம் கட்டிவிட்டு டாப் நடிகையாக வலம் வந்தார், ஒவ்வொரு படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் உயர்ந்து கொண்டே போனது, நயன்தாராவின் இந்த வெற்றிக்கு காரணம் அவர் தேர்வு செய்த கதை தான் என்றும், அதே நேரத்தில் திரிஷா மார்க்கெட் இழக்க அவர் தேர்வு செய்த கதை தான் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு கட்டத்தில் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் தலையில் தூக்கி வைத்து ஆடி கொண்டிருக்க, மறுப்பக்கம் படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கினார் திரிஷா. இருந்தும் தொடர்ந்து படவாய்ப்புகளுக்கு காத்திருந்தார் திரிஷா, ஆனால் முன்னனி ஹீரோக்களுடன் நடித்து ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளலாம் என எதிர்பார்த்த திரிஷாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்பொழுது திருமணம் முடிந்துள்ளார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் அவருடைய தோற்றம் வயது முதிர்ந்த கன்னி போன்று காட்சியளித்தது. இதனாலே தற்பொழுது புதிய பட வாய்ப்புகள் நயன்தாரவுக்கு குறைந்துள்ளது, அதே நேரத்தில் நயன்தாரவுக்கு திரிஷாவுக்கு ஒரே வயது என்றாலும், திரிஷா இன்னும் இளமை தோற்றத்துடன் காட்சியளித்து வருகிறார்.

திரிஷா தற்பொழுது நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தை பெரிதாக நம்பியுள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் டீசரில் திரிஷாவின் இளமை தோற்றத்துடன் வந்த காட்சி பலரின் பாராட்டை பெற்றது திரிஷாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியான பின்பு சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் தனது தோழிகளுடன் கலந்து கொண்டு, மது விருந்திலும் திரிஷா கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, பொன்னியின் செல்வன் படம் வெளியான பின்பு நீ தான் தமிழ் சினிமாவில் டாப் நடிகை. நயன்தாரா இனி அம்மா ,அக்கா வேடத்தில் வேண்டுமானால் நடிக்கலாம் என திரிஷாவை அவரது தோழிகள் பாராட்ட, அதற்கு அவள் லேடி சூப்பர் ஸ்டார் இல்லை, ஆண்டி சூப்பர் ஸ்டார் என நயந்தாராவை அசிக்கப்படுத்தும் விதத்தில் திரிஷா பேச, அங்கே இருந்த அவரது தோழிகள் கைதட்டி சிரித்து தொடர்ந்து அவர்களுக்குள் நயந்தாராவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

சினிமாவை விட்டு போகும் சூரி… யோகிபாபு வைத்த ஆப்பு… சூரியின் பேராசையால் என்ன நடந்தது தெரியுமா.?