மனைவியுடன் டேட்டிங் பற்றி உண்மையை உடைத்த ரவீந்திரன்… வெளிப்படையா என்ன பேசினார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் VJ மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் எந்த ஒரு முன் அறிவிப்பு எதுவும் இன்றி ரகசியமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, திருப்பதியில் நடைபெற்ற திருமணத்தின் அன்று மகாலட்சுமி கழுத்தி தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தாலி கட்டிய பின்பு தான் அனைவருக்கும் தெரியவந்தது.

எதற்காக ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம் என்பது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கூறுகையில். நாங்கள் மூன்று வருடமாக காதலித்து வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, கடந்த ஒன்றரை வருடமாக தான் நாங்கள் காதலித்து வருகிறோம். என்னுடைய தயாரிப்பில் மகாலட்சுமி நடித்தார், அப்போது மற்ற ஆர்டிஸ்ட்கள் என்னிடம் நன்றாக பேசுவார்கள், ஆனால் மகாலட்சுமி அளவோடு பேசி கடந்து செல்வார்.

மேலும் தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய மகாலட்சுமி உடன் நெருங்கி பழக தொடங்கினேன். அதன் பின்பு நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். ஆனால் இந்த காதல் ஏதோ ஒரு காரணத்திற்காக தோல்வியை தழுவினால். அதனால் மகாலட்சுமி ம ஒரு பெண்ணாக மேலும் ஒரு குழந்தையின் தாயாக பாதிக்கப்படுவார் என்பதற்காக தான், திருமணம் வரை இந்த காதலை வெளி உலகத்திற்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தேன்.

நாங்கள் இதற்காகவே பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காதலிக்கும் போது ஜோடியாக சென்றது கிடையாது. ரகசியமாகவே எங்கள் காதலை இருவரும் வளர்த்து வந்தோம். என்னுடைய உருவத்தைப் பற்றி கேலி கிண்டல் செய்பவர்களுக்கு, நான் பதில் அளித்து என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என தெரிவித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர்.

மேலும் திருமணத்திற்கு பின்பு உணவு டயட் செய்து, ஜிம்முக்கு சென்று உடல் பயிற்சியின் மூலம் உடலை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். காதலிக்கும் போது மஹாலக்ஷ்மி உடனான டேட்டிங் பற்றி பேசிய ரவீந்திரன். நாங்கள் காதலித்துக் கொண்டிருக்கும் போது மகாலட்சுமி இரவில் டேட்டிங் அழைப்பார். ஆனால் வெளியில் இருவரும் ஒரே ஓட்டலில் தங்குவது தெரிந்து விட கூடாது என்பதற்காக தவிர்த்து வந்தேன்.

மேலும் இருவரும் டேட்டிங்காக ஒரு ஹோட்டலில் தங்கினால், அது வெளியே தெரிந்து, அதனால் மகாலட்சுமி விமசனத்துக்கு உள்ளாகி, ஒரு பெண்ணாக பாதிக்கப்படுவார் என்பதற்காக தவிர்த்தேன். மேலும் இதனால் நாங்கள் காதலிக்கும் தகவல் வெளியே கசிந்து விடும் என்பதற்காகவே மகாலட்சுமி டேட்டிங் அழைத்தும் இரவில் ஹோட்டலில் இருவரும் ஒன்றாக தங்குவதை தவிர்த்து வந்தோம்.

ஆனால் தற்போது திருமணம் முடிந்து விட்டதால் இனி மகாலட்சுமி அழைத்தால் நிச்சயம் இரவில் வெளியில் சுற்றுவது போன்ற நிகழ்வு மகாலட்சுமி ஆசையை நிறைவேற்றும் வகையில் நடந்து கொள்வேன். நாங்கள் திருமணம் செய்து கொன்டோம் அதனால் எங்களுக்கு இப்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி டேட்டிங் அழைத்ததை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ரவீந்திரன் சந்திரசேகர்.