இரண்டே மாதத்தில் நடந்த உச்சகட்ட சண்டை.. முடிவுக்கு வருகிறது ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை..

0
Follow on Google News

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் அறிமுகமான மஹாலக்ஷ்மி, தொகுப்பாளினியாக இருக்கும் போதே, தன்னுடைய இளமை அழகின் காரணமாக தமிழக இளைஞர்களை தன் வசப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டார்.

இதன் பின்பு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே அணில் என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார் மஹாலக்ஷ்மி. ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன் பின்பு தன்னுடன் நடித்த சக நடிகருடன் கிசு கிசுக்கபட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரனை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார் மஹாலக்ஷ்மி, இவர்கள் திருமணம் ஏற்பாடுகள் மிக ரகசியமாக நடந்து வந்தது, திடீரென மஹாலக்ஷ்மி- ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டது, சினிமா வட்டாரத்தில் மட்டுமில்லாமல், மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய அழகினால் தமிழக இளைஞர்களை தன் வசப்படுத்தி கொண்ட மகாலக்ஷ்மி, உடல் பருமன் அதிகம் கொண்ட ரவீந்திரனை திருமணம் செய்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அடிப்படையில் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த ரவீந்திரன் பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பதால் தான், அவருடைய உடல் பருமனை பொருட்படுத்தாமல் கூட மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டார் என்கிற குற்றசாட்டு எழுந்தது. இருந்தும் தங்களுக்கு எதிராக வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் ஹனிமூன், குலதெய்வ வழிபாடு என செம்ம ஜாலியாக இருந்து வந்தனர் மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர்.

பெரும் கோடீஸ்வரரான ரவீந்திரனிடம், நமக்கு இருக்கும் சொத்துக்களுக்கு சினிமாவில் முதலீடு செய்து தான் சம்பாரிக்க வேண்டுமா.? என குடும்பத்தினர் அறிவுறுத்தி வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சினிமா படங்களை தன்னுடைய லிப்ரா நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்ட பின்பு மனைவி ஆலோசனையை ஏற்று நடிகை ராதிகா போன்று சின்னத்திரை தொடர்களை தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் லிப்ரா நிறுவனத்தில் தன்னை ஒரு பாட்னராக இணைந்து கொள்ள வேண்டும் என மனைவி மகாலக்ஷ்மி விருப்பத்தை நிராகரித்து விட்டார் ரவீந்திரன் என கூறப்படுகிறது. இதனால் மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை பாட்னராக இணைக்கவில்லை என்றால் சின்ன திரை தொடர் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு தரமாட்டேன் என மஹாலக்ஷ்மி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ரவீந்திரன், லிப்ரா நிறுவனம் தயாரிக்கும் சீரியல்களில் நடிகை ராதிகா போன்று முழுக்க முழுக்க மகாலக்ஷ்மி கட்டுப்பாட்டில் தான் இயங்கும், ஆனால் பாட்னராக மட்டும் வேண்டாம் என ரவீந்திரன் தெரிவிக்க. அப்படியென்றால் நான் லிப்ரா நிறுவன விஷயங்களில் தலையிட மாட்டேன் என மஹாலக்ஷ்மி பிடிவாதமாக இருப்பதால், திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்களில் மகாலக்ஷ்மி – ரவீந்திரன் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.

சினிமாவுக்கு குட் பை சொல்லும் அஜித்… தேம்பி தேம்பி அழும் அஜித் ரசிகர்கள்.. எங்கே செல்கிறார் தெரியுமா.?