கீர்த்தி சுரேஷ் – சங்கீதா விவகாரம்.. நச் பதில் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விஜயை விட்டு சங்கீதா சில மாதங்களாகவே பிரிந்து லண்டனில் வசித்து வருவதாக வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

மேலும் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கமாக இருந்து வருவதால் தான் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும், இப்படி கீர்த்தி சுரேஷ் உடன் விஜய்யை தொடர்பு படுத்தியும், இதனால் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக பரபரப்பாக கிசு கிசு செய்திகள் வைரலானது.

இதில் உச்சகட்டமாக கீர்த்தி சுரேஷ் குடியிருக்கும் வீடு கூட தன்னுடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும் என நடிகர் விஜய் விரும்பியதாகவும், அதனால் அவர் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜயின் நண்பன் சஞ்சய் வீட்டு மாடியில் தான் கீர்த்தி சுரேஷ் குடியிருந்து வருவதாக செய்திகள் வெளியானது.

மேலும் சில ஊடகங்கள் கீர்த்தி சுரேஷ் வாகனம் சஞ்சய் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு பரபரப்பு செய்திகளை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்களை விஜய் மேனேஜர் தயாரிக்க இருப்பது பின்னணியி விஜய் இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் சினிமா வாய்ப்பு இல்லாததால், விஜய் தனனுடைய மேனேஜர் ஜெகதீஸ் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு உதவி செய்து வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் விழாவில் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றி விஜய் பேசும்போது.

இன்றைய சமூக ஊடகங்கள் உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். இன்றைய சமூக ஊடகத்தில் வெளியாகும் செய்திகளில், எது உண்மை எது பொய் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும், இதற்கு நீங்கள் பாடப் புத்தகங்களை தாண்டியும் படிக்க வேண்டும்.

முடிந்தவரை பாட புத்தகங்களை தாண்டி படியுங்கள் நமது தலைவர்களை பற்றி படியுங்கள், அம்பேத்கர் பெரியார், காமராஜரை பற்றி படியுங்கள், நல்லதை படியுங்கள், உங்கள் நண்பன் யார் என்று சொல்லி உன்னை பற்றி நான் சொல்கிறேன் என்பார்கள், ஆனால் இப்போது அது மாறிவிட்டது. நீ எந்த சோசியல் மீடியாவை பார்க்கிறாய் என சொல்லு. நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்றாகிவிட்டது என விஜய் பேசினார்.

இந்நிலையில் விஜய் பற்றி இதற்கு முன்பு வந்த கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசு கிசு செய்திகள், மனைவியை விவாகரத்து பற்றிய செய்திகள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில், சோசியல் மீடியாக்களில் வெளியாகும் செய்திகள் பல போலியானவை என தன்னை பற்றி வந்த கிசு கிசு செய்திகளுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டார் விஜய் என்கிறது சினிமா வட்டாரங்கள்.