என் கணவரை பற்றி என்ன தெரியும்.. பயில்வானை கிழித்து தொங்க விட்ட ரோபோ சங்கர் மனைவி

0
Follow on Google News

ரோபோ ஷங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரபல சர்ச்சைக்குரிய சினிமா துறை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், ரோபோ சங்கருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது பற்றி கூறுகையில், ரோபோ சங்கர் பிரபலமான பின்னர் சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானார். மது குடிக்காமல் தூக்கமே வராது என்கிற நிலைக்கு அவர் மாறிவிட்டார்.

அவர் பப்ளிக்காக ஓட்டலில் மது அருந்தியதை பலரும் பார்த்திருக்கின்றனர். மதுப்பழக்கத்தால் அவருக்கு வந்த மஞ்சல் காமாலை தான் அவர் இந்த நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணம். தற்போது அவர் நிற்கக்கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் என அவரை பார்த்தவர் சொன்னார்கள்” என பயில்வான் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது உடல் நலம் தேறி மீண்டு வந்துள்ள ரோபோ சங்கர், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு 5 மாதங்கள் படுத்த படுக்கையாகவே இருந்தேன். மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த கெட்ட பழக்கவழக்கங்கள்தான்.

கெட்ட பழக்கம் இல்லாமல் இருக்கவே முடியாது. நடுராத்திரியெல்லாம் எழுந்து கிறுக்கு போல் திரிய தொடங்கினேன். என்னுடைய ரத்தத்தில் மஞ்சள் காமாலையின் பாதிப்பு இருந்தது, கெட்ட பழக்கவழக்கங்களால் என்னுடைய உறுப்புகள் பாதிக்கப்பட்டது. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என ரோபோ சங்கர் தான் செய்த தவறை ஒப்பு கொண்டு, அதில் இருந்து மீண்டு வந்து மகிழ்ச்சியாக இருப்பதாக பேசியிருந்தார்.

இந்நிலையில் ரோபோ சங்கர் மனைவி கணவர் உடல் நலம் குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில், யாருமே இங்கு 100 சதவீதம் சரியானவங்க கிடையாது. ஏதாவது ஒரு விசயத்தில் குறை இருக்கும். அது போதையோ, மயக்கமாவோ இருக்கும். அதிலிருந்து மீண்டு வருபவர்கள் தான் வரலாறு படைப்பார்கள். என் கணவரும் மீண்டு வந்து அவரோட வாழ்க்கையை தொடங்கிட்டார். அவருக்கு மஞ்சள்காமாலை இருந்தது தெரியாமல், அது ரத்தத்தில் கலந்து உடல் எடை குறைந்துவிட்டது.

பயில்வான் போன்றவர்கள் எல்லாம் எல்லை மீறி என் கணவர் உடல்நிலை குறித்து விமர்சனம் செய்தார்கள். அதை மக்கள் பார்த்துக் கொள்ளட்டும். இதே மீடியா தான் இவரை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அவர் கீழே விழும் போது அவரை தூக்கிவிட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘நீ ஓவரா குடிச்சுட்ட.. ஓவரா ஆடிட்ட.. அதுக்கு தான் இன்னைக்கு ஆப்பு வெச்சுட்டாரு கடவுள்’ என்று பேசினால், எப்படி என்ன ஒரு மனிதனின் வேதனையில் உங்களுக்கு கொண்டாட்டம்?

அப்படி கமெண்ட் பண்றவங்களின் பின்புலத்தை வீட்டில் போய் பார்த்தால் தான் தெரியும். அவர் செய்த தப்புக்கு வீட்டில் எவ்வளவு ரிவிட் வாங்கியிருப்பாரு? தவறு பண்ணிட்டு, நான் செய்தது தவறுனு சொல்லி வெளியே வருபவன் தான் கிரேட். நான் செய்யுறது தவறு தான், அதை நான் தொடருவேன்னு சொல்றால் பாத்தீங்களா, அவன் சரி கிடையாது என ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா பேசியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய கணவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது கண்டபடி பேசிய பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய ரோபோ சங்கர் மனைவி, மேலும் நான் செய்தது தவறுனு சொல்லி வெளியே வருபவன் தான் கிரேட். நான் செய்யுறது தவறு தான், அதை நான் தொடருவேன்னு சொல்றால் பாத்தீங்களா, அவன் சரி கிடையாது என தன்னுடைய கணவர் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து தான் செய்தது தவறு என உணர்ந்துள்ளார் என கணவரை விட்டு கொடுக்காமல் பேசியுள்ளார்.