ஏய் மாமா முக்தர்… ஓட்டலில் நடந்தது என்ன.? நடிகை கஸ்தூரி ஆவேசம்…

0
Follow on Google News

சமீபத்தில் கஸ்தூரி தொடர்பான ஸ்ரீ வித்யா என்கின்ற பெண்ணிடம் முக்தர் எடுத்த பேட்டி நடிகை கஸ்தூரியை மிகப்பெரிய அளவில் கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த பேட்டியில் ஸ்ரீவித்யா என்கின்ற பெண் சினிமா பெண்களை ஒரு போதைப் பொருளாக தான் காட்டுகிறது, உடல் சார்ந்த விஷயத்தைதான் இப்போது காட்டுகிறது என பதிலளித்த போது,

உடனே நெறியாளராக முக்தர் குறுக்கிட்ட நடிகை கஸ்தூரி அந்த மாதிரி எல்லாம் நடிக்கவில்லை, நடிகை கஸ்தூரி ஆபாச காட்சிகளில் நடித்தது கிடையாது. கஸ்தூரி சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் செய்யக்கூடியவர், கஸ்தூரி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழக்கூடியவர், ஆபாசத்தை திரைப்படத்தில் எதிர்த்தவரை பற்றி ஏன் இப்படி பேசுகிறார்கள் என முக்தர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஸ்ரீ வித்யா என்கின்ற பெண் தன்னுடைய தொலைபேசியில் இருந்து ஒரு வீடியோவை முத்தரிடம் காட்டுகிறார், அந்த வீடியோவில் குத்துவிளக்கு, குத்து விளக்கு சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு என்கின்ற பாடலுக்கு கஸ்தூரி ஆடியதை பார்த்து, அய்யயோ என்ன இது என ஆச்சரியத்துடன் கேட்கும் முக்தர். இதனைத் தொடர்ந்து தண்ணி அடிக்கக்கூடாது என்று கஸ்தூரி சொல்வதற்கு முழு தகுதி இருக்கு. ஏனென்றால் அவர் தண்ணீரஅடித்தது இல்லை என்று முத்தர் கேள்வி எழுப்ப.

அதற்கு ஸ்ரீவித்யா என்கின்ற பெண் ஒரு தனியார் ஓட்டல் பெயரை குறிப்பிட்டு, அந்த ஓட்டலுக்கு சென்று விலை உயர்ந்த மதுவை கஸ்தூரி அருந்ததியதாகவும், டாஸ்மாக் கடைகளில் லோக்கல் சரக்கு தான் கிடைக்கும் ஆனால் பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் விலை உயர்ந்த சரக்குகள் எல்லாம் கிடைக்கும், அதனால் அந்த ஓட்டலுக்கு சென்று சுமார் 41 ஆயிரம் ரூபாய்க்கு கஸ்தூரி தண்ணி அடித்ததாக தெரிவித்த ஸ்ரீவித்யா என்கிற பெண்.

அந்த 42 ஆயிரத்தை ஒரு யூட்யூப் சேனல் காரன் தலையில் கட்டி விட்டு சென்று விட்டார் என ஸ்ரீ வித்யா என்ற பெண் தெரிவித்தார். மேலும் கஸ்தூரி குறித்து ஸ்ரீவித்யா என்பவர் தொடர்ந்து பேச பேச, அவரை மேலும் மேலும் தூண்டி விடுவது போன்று கேள்வி எழுப்பிய நெறியாளர் முக்தர், மேலும் முகம் சுளிக்கும் வகையில் பல கேள்விகளை ஒரு நெறியாளரான முக்தர் கேட்டது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

முக்தர் இது போன்று கேள்வி கேட்பது புதிதல்ல, இதற்கு முன்பே சில பேட்டிகளில் அவர் சர்ச்சை கூறிய வகையில் கேள்வி எழுப்பி அது மிகப் பெரிய விமர்சனத்துக்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது நடிகை கஸ்தூரி குறித்து முக்தர் எழுப்பிய கேள்விகள் பெண்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் தன்னை பற்றி வெளியான இந்த பேட்டி குறித்து கஸ்தூரி மிக ஆக்ரோஷமான தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், ஊடகவல்லூறு மாண்புமிகு மாமா முக்தார் மற்றும் கற்பனை புயல் கட்டுக்கதை ராணி ஸ்ரீவித்யா இருவரும் கூடி அமர்ந்து என்னை அரை மணிநேரம் அவதூறு செய்துள்ளார்கள். என்னை இல்லாததும் பொல்லாததும் சொல்லி தாக்குற அளவுக்கு எரியுது என்றால் என் செயல்பாடு சரியாக சிறப்பாக உள்ளது என்பதற்கு அத்தாட்சி என தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

மேலும் இதை சும்மா விடப்போவதில்லை. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது என்பார்கள். ஆனால் இந்த இரண்டு பொய்யர்களுக்கும் மணியடிச்சா சோறு கிடைக்க நான் பொறுப்பு. எல்லை மீறி விட்டீர்கள். பின்விளைவுகளுக்கு தயாராக இருங்கள் என மிக கடுமையாக நடிகை கஸ்தூரி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.