காயத்ரி ரகுராம் விவகாரம்.. ஹோட்டலில் நடந்ததை போட்டுடைத்த வரிச்சூர் செல்வம்..

0
Follow on Google News

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி சூர்யா வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் மிக பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது, காயத்ரி ரகுராம் ஒவ்வொரு டிவீட்டர் பதிவுக்கும் பதில் கொடுத்து வந்த திருச்சி சூர்யா, நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் வரிச்சியூர் செல்வம் உடன் காயத்ரி ரகுராம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திருச்சி சூர்யா.

காயத்ரி ரகுராம் இப்படி எங்க போன வந்த என்பதும் எல்லோருக்கும் தெரியும், ராத்திரி அதுவும் ரவுடி கூட தோப்புல உனக்கு என்ன வேலை. நீதானே போட்டோ வீடியோ கேட்டுக்கிட்டே இருந்த.இதுக்கு மேலயும் ஏதாச்சு பேசுனா.? இதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வெளியில வரும் என வரிச்சியூர் செல்வம் உடன் நடிகை காயத்ரி ரகுராம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களுக்கு உரிமை தேடித் தர மூஞ்சிய பாரு என திருச்சி சூர்யா தெரிவித்து இருந்தார்.

திருச்சி சூர்யா வெளியிட்ட இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் திடீரெனெ, தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் இருந்து அந்த சர்ச்சை கூறிய புகைப்படத்தை நீக்கினார் திருச்சி சூர்யா. இருந்தாலும் வரிச்சியூர் செல்வம் உடன் காயத்ரி ரகுராம், அதுவும் இரவு நேரத்தில், திருச்சி சூர்யா சொன்னது போன்று தோப்பில் என்ன வேலை என யூகங்கள் அடிப்படையில் பல்வேறு செய்திகள் வெளியானது.

இப்படி ஒரு பரபரப்பான சூழலில், காயத்ரி ரகுராமை சந்தித்தது எப்படி, புகைப்படம் எடுத்த ஓட்டலில் நடந்தது என்ன என்பது பற்றி இந்த விவகாரத்தில் சம்பந்த பட்டுள்ள வரிச்சியூர் செல்வம் முழு விவரத்தை போட்டு உடைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வரிச்சியூர் செல்வம் பேசுகையில். மதுரையில் உள்ள பெல் ஓட்டலுக்கு காயத்ரி ரகுராம், மாஸ்டர் கணேஷ் உட்பட சினிமா துறையை சேர்ந்த ஆறு பேர் சாப்பிட வந்ததாகவும்,

அப்போது தானும் பெல் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது, என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்கள் என தெரிவித்தவர்.அன்று ஒரே ஒரு நாள் மட்டும் தான் காயத்ரி ரகுராமை சந்தித்துள்ளேன்,எனக்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என வரிச்சியூர் செல்வம் தெரிவிக்க, அதற்கு செய்தியாளர் ஒருவர் ஒரே நாளில் எப்படி புகைப்படம் எடுக்கும் அளவுக்கு எப்படி என கேட்க, அதற்கு நான் வித்தியசமாக இருப்பதால் என்னுடன் பிச்சைகாரர் முதல் பணக்காரர்கள் வரை புகைப்படம் எடுக்க விரும்புவார்கள் என்றார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து வரிச்சியூர் செல்வம் தொடர்ந்து பேசுகையில், இது தொடர்பாக திருச்சி சூர்யா அவருடைய தந்தை திருச்சி சிவாவை தொடர்பு கொண்டு, பேசிய போது அவருடைய மகனுடன் பேசுவதில்லை என தெரிவித்தார், அதன் பின்பு திருச்சி சூர்யாவை தொடர்பு கொண்டு, நடந்த உண்மையை தெரிவித்து, ஏம்பா இப்படி எல்லாம் போடலாமா.? அந்த பெண் யார் என்றே தெரியாது.

ஒரு நாள் வந்து போட்டோ எடுத்தது இது குற்றமாயா.? இதெல்லாம் தப்பு இல்லையா தம்பி என கேட்டேன், அதற்கு சாரி சொன்ன திருச்சி சூர்யா.உடனே அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டு, எனக்கு டெலிட் செய்த தகவலையும் தெரியப்படுத்தினார் என காயத்ரி ரகுராம் உடன் இருந்த புகைப்பட சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் நடந்த சம்பவத்தை போட்டு உடைத்து தெளிவு படுத்தி உள்ளார் வரிச்சியூர் செல்வம். மேலும் அந்த பேட்டியில் நமது தினசேவல் நியூஸில் வரிச்சியூர் செல்வம் உடன் காயத்ரி ரகுராம் உள்ள புகைப்படம் மதுரை பெல் ஓட்டலில் நடந்த எதார்த்தமான சந்திப்பு தான் என்பதை செய்தியாக வெளியிட்டதையும் வரிச்சியூர் செல்வம் சுட்டி காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.