மன்னிச்சுடுங்க சார்… கண் கலங்கிய நயன்தாரா.. தேவையே இல்லை என தூக்கிய எறிந்த பிரபல இயக்குனர்..

0
Follow on Google News

கேரளாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்த நயன்தாரா, ஐயா படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக இயக்குனர் ஹரி அறிமுக படுத்தினர். முதல் படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருதேன் என்கிற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஐயா படத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் அவருக்கு இருந்தாலும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை, இதற்கு காரணம் நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரம் அந்த அளவுக்கு வலுவாக இல்லாதது தான்.

ஆனால் பிரபு தேவா உடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின்பு ராஜா ராணி படத்தின் மூலம் ரீ – என்ட்ரி கொடுத்த நயன்தாரா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார். டாப் நடிகையாக இருக்கும் போதே ஏழு வருடமாக காதலித்து வந்த காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நயன்தாரா ஹரி இயக்கும் ஐயா படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பு, கேரளாவில் இருந்து கொண்டே தமிழ் சினிமாவில் நடிக்க தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தன்னுடைய புகைப்படத்தை அனுப்பி வைத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை தேடி வந்துள்ளார் நயன்தாரா.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த குடைக்குள் மழை படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வில் பார்த்திபன் ஈடுபட்டு வந்துள்ளார், அப்போது பலர் குடைக்குள் மழை படத்தில் நடிப்பதற்காக தங்களுடைய புகைப்படத்தை படத்தின் இயக்குனர் பார்த்திபனுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள், அதில் கேரளவில் இருந்து குடைக்குள் மழை படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு நடிகை நயன்தாராவும் அவருடைய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

நயன்தாரா புகைப்படத்தை பார்த்த பார்த்திபன், உடனே நயன்தாராவை தொடர்பு கொண்டு ஒரு தேதி குறிப்பிட்டு நேரில் வர சொல்லி இருக்கிறார். ஆனால் நயன்தாரா பார்த்திபன் குறிப்பிட்ட அதே தேதி அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சாரி சார், பஸ் கிடைக்கவில்லை இன்று என்னால் உங்களை சந்திக்க வரமுடியவில்லை, அதனால் இன்று புறப்பட்டு நாளை வந்து விடுகிறேன், ப்ளீஸ் சார் என நயன்தாரா கேட்டுள்ளார்.

ஆனால் நடிகையை தேர்வு செய்து உடனே அடுத்தடுத்த படத்தின் வேலைகளை தொடங்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருந்த பார்த்திபனுக்கு, குறிப்பிட்ட தேதியில் நயந்தாரா வராமல்,அடுத்த நாள் வருவதாக சொன்னது, செம்ம டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது. நேர்முக தேர்வுக்கே சரியான நேரத்தில் வராத நயன்தாரா அடுத்து படப்பிடிப்புக்கு எப்படி சரியான நேரத்திற்கு வருவார் என கோபத்தில், நீ என் படத்தில் நடிக்க வரவே வேண்டாம் என நயன்தாரா தொலைபேசியை துண்டித்து விட்டார்.

இதன் பின்பு பார்த்திபன் இயக்கி நடித்த குடைக்குள் மழை படத்தில் நடிகை மதுமிதா நடித்துளளார். இந்த படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது, இதன் பின்பு அடுத்த ஒரு வருடத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நயன்தாரா நடிகையாக அறிமுகமாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அறிமுக நடிகை நயன்தாராவுக்கு பெரும் புகழும் வாங்கி கொடுத்த படம் ஐயா.

இந்நிலையில் நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தில் வில்லனாக நடித்த பார்த்திபனை கத்தியால் குத்தி பழி வாங்கும் கேரக்டரில் நயன்தாரா படம் முழுவதும் வலம் வருவார். ஆனால் இக்கதாபாத்திரத்தில் பார்த்திபனை தான் நடிக்க வைக்க வேண்டுமென விக்னேஷ் சிவனிடம் தனக்கு வாய்ப்பு கொடுக்காத பார்த்திபனை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நயன்தாரா தான் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.