விஷால் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்… அவருக்கு கல்யாணமே நடக்காது… சினிமா பிரபலம் சொன்ன பகீர்..

0
Follow on Google News

பிரபல திரைப்பட நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் 90ஸ்களில் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவில் வலம் வந்த இவர் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சினிமா பற்றிய பல விஷயங்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி தற்போது பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மற்றும் நடிகர் சங்கத் தலைவருமான விஷாலை பற்றி பயில்வான் விமர்சித்திருக்கிறார். நீண்ட காலமாக கட்டி முடிக்காமல் இருக்கும் நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஷால் பேசி இருந்தார். அப்போது நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடிக்க 40 கோடி கடன் வாங்கப்போவதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

மேலும் அடுத்த ஆண்டு நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் அந்த கட்டிடத்தில் தான் நடைபெறும் எனவும் கட்டிடம் கட்டி முடிந்த பிறகுதான் தனது திருமணம் நடைபெறும் எனவும் விஷால் கூறியிருந்தார். முன்னதாக நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை லோன் போட்டு கட்டி முடிக்கலாம் என பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தார்கள்.

ஆனால் அப்போது இவ்வாறு லோன் எடுப்பது சரியாக வராது என விஷால் பேசி இருந்தார். மேலும் இந்த திட்டமானது மிகப்பெரிய தவறு என்று அப்போது நடைபெற்ற நடிகர் சங்கம் தேர்தல் பிரச்சாரத்தின் போது சரத்குமாருக்கு எதிராக எதிர்ப்பு கருத்தை கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் விஷால். நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல்நாட்டு வேலையை விஷால் மற்றும் நாசர் ஆரம்பித்தார்கள்.

ஆனால் அப்பொழுது கொரோனா தொற்று பெரிய அளவில் பரவி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் அந்த வேலை பாதியில் அப்படியே நிறுத்தப்பட்டது. அதன் பின் அந்த கட்டிடத்தை கட்டுவதற்கு தற்போது வரை எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. அந்த கட்டிடத்தை மறுபடியும் கட்டலாம் என்றால் ஏற்கனவே கட்டிய பாதி கட்டிடத்தை இடித்து விட்டு தான் கட்ட முடியுமாம்.

மேலும் மூன்று வருடங்களுக்கு மேலாக கட்டிடம் சும்மாவே இருந்ததால் அதில் உள்ள இரும்பு கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து விட்டதாம். அதன்படி துருப்பிடித்த கம்பியை வைத்து தொடர்ச்சியாக கட்ட முடியாத சூழ்நிலைக்கு அந்த கட்டிடம் சென்றுவிட்டது. தற்போது மறுபடியும் நடிகர் சங்க கட்டிடத்தை புதிதாக கட்ட வேண்டும். எனவே அதற்கு பேங்க் லோன் வாங்கியே ஆக வேண்டும் என்று விஷால் கூறி வருகிறார்.

இதைத்தான் அப்பவே பேங்க் லோன் வாங்கி கட்டிடத்தை கட்டலாம் என்று சரத்குமார் கூறினார். ஆனால் அன்று சரத்குமாரின் முடிவை தவறு என்று சொல்லிவிட்டு அதனை ஒரு காரணமாக காட்டி தேர்தலில் வெற்றி பெற்ற பின் இப்போது பேங்க் லோன் வாங்க வேண்டும் என்று மீண்டும் அதையே கூறுகிறார் விஷால். மேலும் நடிகர் சங்க கட்டிடத்தை மேற்கொண்டு எவ்வாறு கட்டி முடிக்கலாம் என்று இன்று வரை ஒரு பிளானிங்கே இல்லாமல் தான் விஷால் சுற்றிக் கொண்டுள்ளாராம்.

மேலும் நடிகரும் முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்கு, நடிகர் சங்கத்தின் பொறுப்பாளராக முன்னே நின்று விஷால் எந்த ஒரு விஷயத்திலுமே பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு நீலி கண்ணீர் விட்டு நடித்திருந்தார். தற்போது நடிகர் சங்கத்தின் கட்டிடத்தையும் முழுமையாக கட்டி முடிக்கவில்லை.

இதில் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் என்னுடைய கல்யாணம் என்று கூறியுள்ள விஷாலுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணமே நடக்காது. நடிகர் சங்க கட்டிடத்தையும் கட்ட மாட்டார் திருமணமும் செய்து கொள்ள மாட்டார். விஷால் வாய் பேசுவதை தவிர எதுக்குமே லாயக்கில்லை என்று பயில்வான் யூடியூபில் விஷாலுக்கு சாபத்தை கொடுக்கும் வகையில் பயில்வான் பேசியுள்ளார்.