எட்டுக்கு கோடிக்கு நாமம் போடும் விஷால்… வசமாக சிக்கிய இயக்குனர் பாண்டிராஜ்..

0
Follow on Google News

நடிகர் விஷால் நிதி,நேர்மை , நாணயம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு சினிமா துறையில் கடும் அவ பெயரை பெற்றுள்ளார். நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியான படம் சின்னத்தம்பி. இந்த படத்தின் தயாரிப்பாளர் பாலு. இவர் கொரோனா தொற்று காரணமாக மறைந்துவிட்டார். இவர் மறைவதற்கு முன்பு நடிகர் விஷால் வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

அப்போது விஷால் தனக்கு பொருளாதார சிக்கல் இருப்பதாக தெரிவித்து படம் தொடங்குவதற்கு முன்பே பணம் கேட்டுள்ளார். படத்தில் நடிக்கும் போது வாங்கிய தொகையை கழித்து கொள்ளலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் விஷாலுக்கு ரூபாய் 7 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் பாலு. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக பாலு மரணம் அடைத்தார்.

இதனை தொடர்ந்து பாலு தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுத்து அவர் குடுப்பத்திற்கு நல்ல லாபத்தை பெற்று தருவேன் என நடிகர் விஷால் உறுதியளித்தார். ஆனால் அதற்கான வேலைகளில் எடுபடவில்லை. மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்களின் மனைவி தன்னுடைய கணவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தரும்படி விஷாலிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை.

இதே போன்று லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்த வந்த விஷால் மீது லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் விஷாலை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள், சரியான நேரத்திற்கு விஷால் ஷூட்டிங் வராமல் அவர்களுக்கு மிக பெரிய சிரமத்தை கொடுத்து வருகிறார், இதனால் விஷாலை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் தயங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் இயக்க கால் சீட் கேட்டு காத்திருந்த இயக்குனர் பண்டிராஜ், கால் சீட் கிடைக்காததால், தற்பொழுது நடிகர் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பதற்கு முன் வந்துள்ளார் . 5 ஸ்டார் கதிரேசன் ஏற்கனவே நடிகர் விசாரணை வைத்து படம் எடுப்பதற்காக எட்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்து இருந்திருக்கிறார்.

ஆனால் அந்த படம் இதுவரை தொடங்கப்படவில்லை, ஆகையால் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை கையில் எடுத்தால் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த அட்வான்ஸ் தொகையை கழித்து விடுவார். மேலும் தன்னுடைய பழைய சம்பளத்தை தான் கணக்கிடுவார் என்பதால் விஷால் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தில் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். இந்த நிலையில் தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்து வருகிறார் பாண்டியராஜ் கடைசியில் விசாலிடம் பாண்டியராஜ் சிக்கி தவித்து வருகிறார் என்கிறது சினிமா வட்டாரங்கள்